Friday, July 1, 2016

சமூகத்தை உயர்த்த அறிவாற்றலுடன் களமிறங்குவோம்!

    உலக வரலாற்றில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்க்கை பலவிதமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தே வந்துள்ளது. பலநூறு ஆண்டுகளாக தங்களுக்குள் மோதிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டு தங்கள் போக்கை மாற்றிக் கொண்டனர்.

   அதே போல வரலாறு முழுவதும் வேட்டையாடப்பட்ட யூதர்கள் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து தங்களுக்காக ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டனர். அதே போல மதத்தின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டு மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக நடத்தப்பட்ட தலித் சமூகம் அம்பேத்கர், தந்தைபெரியார் போன்றோர் வழிகாட்டபட்டதின் விளைவாக இந்தியா விடுதலை பெற்று 63 ஆண்டுகளுக்குள் அவர்கள் இந்திய அரசுத் துறையின் அனைத்துப் பொறுப்புகளிலும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

  ஆனால் வரலாறு முழுவதும் வாழ்வாங்கு வாழ்ந்த நமது முஸ்லிம் சமூதாயம் 1857 க்குப் பிறகான பிரிட்டிஷ் ஆட்சியிலும் பிறகு 1947 க்குப் பிறகான குடியரசு இந்தியாவிலும் புரந்தள்ளபட்ட மக்களாக மாறிப் போய் விட்டனர். தலித் சமூகத்தைக் காட்டிலும் கீழான நிலையில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தனது ஆய்வரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    முஸ்லிம்களின் இந்த சமூக பின்னடைவை மாற்றுவதற்கு அரசு எந்தவித நிலையான திட்டத்தையும் வகுக்காத நிலையில் முஸ்லிம்களின் வாழ்வை மேம்படுத்திட அவர்களாகவே தங்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களும் அறிவார்ந்த மக்களும் முஸ்லிம்களுக்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் வழிகாட்ட வேண்டும்.

    வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதலை இஸ்லாமிய அடிப்படையில் மக்களிடம் எடுத்துச் செல்லும் போது அவற்றை முறையாகப் பின்பற்றும் மக்கள் மட்டுமே வரலாற்றில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக முஸ்லிம் சமூதாயம் அடுத்த 20 ஆண்டுகளில் தங்களது கல்வியிலும், பொருளாதார முறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அதிகமாக துஆ செய்யுங்கள் என்றும்,அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment