Monday, February 2, 2015

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார் (கி.பி 1862 - கி.பி 1931)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

         தனது 16ம் வயதில் தந்தையை இழந்த இவர் தனது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து. பிறகு குர்ஆன் ஓதிகொடுக்கும் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் 1912கலில் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைப்பற்றி தனது இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியாவை வைத்தது.

         இதனை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்த்து இயக்கம் நடத்தி அதன் தலைவராக இருந்தார். இவர் தன் இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, வீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்து வந்தார்.

         இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே தொடர்த்து போர் நடந்தது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்துருந்த உமர் முஃக்தார் அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர் புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு  ஆசிரியராக இருந்தபோதிலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர் தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். இதுவே உலகின் முதல் கொரில்லா படை தாக்குதல் என்று கூறப்படுகிறது..

         கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல்கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் போராடினார்கள். இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக்கூடாது என்ற வெறியும், உமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

         பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக “பெனிட்டோ” முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.

         உமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும்படி வற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இறுதியில் இத்தாலியப் படைகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

         இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி,  சர்வதேச விதி முறைகளையும் மீறி,  அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 70 (எழுவது). சிறையில் சிறை அதிகாரி இவரிடம் “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ”ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும், அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

         உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் “உமர் முக்தார்” என்ற பெயரில் 1980களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

         நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற போராளிகளின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

No comments:

Post a Comment