Tuesday, April 14, 2015

இஸ்ரேல் பற்றிய சிறு குறிப்பு (Small notes about Isreal)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

         சொல்ல வருத்தமான செய்தியாக இருந்தாலும் இந்த உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு சின்ன குட்டி நாடு (அகதிகள் முகாம்) மொத்தமே 1.5 கோடி மக்கள் தான். ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள். எப்படி??? அந்த மக்கள் பற்றிய இதோ சில குறிப்புகள்!!!

        கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் (Phd..,) வாங்கி இருக்க வேண்டுமாம். கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனம் ஆரம்மித்து 15 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்பத்தான் கல்லூரியில் சீட் கிடைக்கும், இன்று உலகில் உள்ள பாதி முக்கிய நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது.

       உலகில் உள்ள அணைத்து சிறுவர் கார்டுன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான். ஆனால் அந்த நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை. அவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

       கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி, சினிமா போன்ற தேவையற்றத்தை பார்க்க அனுமதிக்க படுவதில்லை. அதற்க்கு பதில் கற்பமாக இருக்கும்பொழுது கணக்கு, அறிவியல், மொழிகள் போன்ற பல பாடம் படிப்பார்கலாம். அப்போது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம்.

       உலகத்தில் அதிகமாக நோபல் பரிசு வென்றவர்களும் இந்த நாட்டில் (அகதிகள்) தான் உள்ளார்கள். உலகத்தில் மொத்த படித்த மேதாவிகளும், உலகத்தை மறைமுகமாக ஆள்பவர்களும் இவர்கள்தான் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... யார் அவர்கள்? எதற்கு இந்த அளவுக்கு வெறித்தனம்?

      உலகில் நமக்கென்று ஒரு நாடு இல்லையே என்று உலகம் முழுவதும் நாடோடிகளாக திரிந்து பிறகு முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து அதுதான் எங்கள் நாடு என்று தாங்களே அறிவித்து தங்களுடைய சூழ்ச்சி புத்தியால் இஸ்லாமியர்களை அளிப்பதற்கும் உலகை தங்களுடைய கட்டுப்பாட்டில் கோண்டுவருவதற்கும் வாழும் ஒரே நாடு (அகதிகள் முகாம்) இஸ்ரேல்....    

Thursday, April 2, 2015

சுலைமான் அல் கானூனி (கி.பி 1494 - கி.பி 1566) Suleiman the Magnificent ( 1494 – 1566 )

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

       உங்களில் இருவர் இருந்தாலும் அதில் ஒருவர் அமிராக இருங்கள் என்ற இஸ்லாமிய கோட்பாடுக் கேற்ப்ப ஏறக்குறைய 469 ஆண்டுகள் உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக் கேடயமாக துருக்கியை தலைமையிடமாகக் கொண்டுயிருந்த உதுமானிய கிலாஃபதில், சுலைமான் அல் கானூனி ஆட்சி செய்த கி.பி. 1520 - 1566 வரையிலான 46 ஆண்டு உதுமானிய பேரரசின் உச்சகட்ட காலம் என்றும், வலிமையான பேரரசாக திகழ்ந்த காலம் என்றும், வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்றைக்கும் கூட ஐரோப்பிய அறிவுஜீவிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் அவரை சிறப்பு வாய்ந்த சுலைமான் (Sulaiman the Magnificiant) என்று அழைக்கின்றனர்.

       இஸ்லாமிய உலகமும், முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களும் அவரை சட்டங்களை வகுத்த சுலைமான் என்று அழைகின்றனர். உதுமானிய பேரரசு என்றாலே சுலைமான் அல் கானூனி அவர்களின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவிற்கு தனது அறிவாலும், வீரத்தாலும், விவேகத்தாலும் வரலாற்று ஏடுகளில் தனி முத்திரை பதித்துள்ளார்.

        உலக வரலாற்றில் முஸ்லிம் அரசர்கள் பெருவாரியாக கட்டிடக் கலையின் மீது அலாதிப் பிரியமுடையவர்களாக வாழ்ந்துள்ளனர். இஸ்லாமிய கட்டிடக் கலை என்ற புதிய ஒரு கலையை உலகில் நிலை நாட்டினர். இஸ்லாமிய மார்க்கத்தின் எழுச்சியையும், தங்களது ஆட்சியின் பெருமையையும், புகழையும், ஓங்கி ஒழித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் கட்டிய கட்டிடங்கள், மாளிகைகள், கோபுரங்கள், கோட்டைகள், பள்ளிவாசல்கள் இவ்வுலகில் பல பாகங்களிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன.

      சுலைமான் அல் கானூனி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் தனது வாழ்நாள் சாதனையாக கருதி கட்டிய “சுலைமானிய்யா மஸ்ஜித்” என்ற பள்ளிவாசல் கி.பி. 1550 இல் துவங்கி 8 ஆண்டுகள் கட்டப்பட்டது. இன்றும் உலக மக்களின் உள்ளங்களைக் கவர்த்து வருகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புலிற்கு வருகை தரும் சுற்றுலாக் பயணிகள் இங்கு செல்லாமல் அவர்கள் திருப்புவதில்லை, அதேபோல் அதிகமான கட்டிடக்கலை மாணவர்களும், நிபுணர்களும் இங்கு வருகின்றனர்.

       இந்த பள்ளிவாசலின் தொழுகைக்கு இடம், ஆரம்ப பாடசாலை (ஷுஃபா), உயர்கல்வி நிறுவனம் (மதரஷா), ஜாமிஆ (பல்கலைகழகம்), மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி (தாருஸ் ஷிஃபா), பொதுக்குளியல் அறை (ஹம்மாம்), வழிப்போக்கர் தங்கும் இடம் (சிராய்), பொது சமையலறை (இமாரத்) ஆகிய உள்கட்டமைப்புகளை அமைத்து உலக மக்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

       அதே போல் பள்ளிவாசல்களில் இமாமாக இருக்க சில தகுதிகளை நிர்ணயித்தார்.
1. அல்-குர்ஆன் மற்றும் ஹதிஸ் கலையில் நுண்ணிய அறிவு இருக்க வேண்டும்.
2. நான்கு மத்ஹபு மற்றும் ஷரிஅத் தொடர்பாக விரிவான அறிவை கொண்டிருக்க வேண்டும்.
3. புதிய பிரச்சனைகளுக்கு அல்-குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து தீர்வு எடுக்கும் திறன் இருக்க வேண்டும்.
4. அரபி, துருக்கி, ஹிப்ரு, பார்ஷி போன்ற மொழிகளில் தேர்ச்சி வேண்டும்.
5. கணிதம், இயற்பியல், வேதியல், வானியல் போன்ற அறிவியல் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
6. உலக வரலாறு, உலக சட்டங்கள் பற்றிய அறிவு மற்றும் நல்ல குரல் வளமும் பேச்சாற்றலும் கொண்டிருக்க வேண்டும்.

        தலைமை இம்மாமின் தகுதிகள் என்று நிர்ணயித்தவுடன் அன்றைய ஆலிம்கள் ஆடிப்போய் விட்டனர். இப்படிப்பட்ட ஆலிம்களை உருவாக்குவதற்க்கான பாடத் திட்டமோ ஆய்வு நிறுவனங்களோ நம்மிடம் இல்லை என்று கலிஃபாவிடம் முறையிட்டனர். துருக்கி சாம்ராஜ்யத்தின் அணைத்து மதரஸா மற்றும் ஜாமியாக்களின் பாடத் திட்டங்களை உடனடியாக மேம்படுத்தி இனி வருங்காலதிலாவது உலகின் போக்கை இஸ்லாத்தின் திசைக்குத் திருப்ப கூடிய ஆற்றல் பொருத்திய இமாம்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
   
        சுலைமான் அல் கானூனி அவர்கள் மரணிக்கும் போது ஆசியா, ஆப்பிரிக்க, ஐரோப்பா என்று மூன்று கண்டங்களின் 40 ஆயிரம் சதுர. கி.மீ நிலப்பரப்பையும், 21 மாகாணங்களைக் கொண்டதாக, ஏறக்குறைய  20 தேசிய இன மக்கள் வாழும் உலகின் பரந்து விரிந்த அதிவலிமையான வல்லரசாக உதுமானிய பேரரசு திகழ்ந்து. ஆனால் அவருக்கு பிறகு ஏற்பட்ட வாரிசு சண்டையில் சிக்கி இஸ்லாமிய கிலாபாத் பலவீனம் அடைந்தது.

       சுலைமான் அல் கானூனி போன்ற ஒரு சில உயிப்புள்ள கலிபாக்கள், சுல்தான்கள், அரசர்கள் தங்களுக்குப் பிறகு தங்களை போன்ற திறனுடைய அடுத்த தலைவர்களை உருவாக்காமல் சென்றதுதான் முஸ்லிம்களின் அரசுகள் சரிந்து வீழ்ந்ததற்கான மிக முக்கிய காரணம் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொண்டு நமது இலட்சிய பயணத்தை தொடருவோம்.! அத்துடன் நமது வெற்றிக்கு அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வேமாக.! ஆமின்.!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் , இவர்கள் செய்த சாதனைகளையும், அதே போல் இவர்கள் எவ்விஷயத்தில் தவறு இழைத்தார்கள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!