நமது பள்ளி புத்தகத்தில் முகலாய சாம்ராட்சியம் என்றால் அக்பர் என்ற ஒரு
அயோக்கியன் பெயர்தான் வரும் அவனுடைய காலத்தை சிறந்த காலம் என்று படித்தோம். “AKBER THE GREAT” என்ற தலைப்பில் இருக்கும். இதை தான் நானும்
படித்தேன் நீங்களும் படித்து இருப்பிர்கள். நாம் மட்டுமா நம்முடைய பிள்ளைகள் கூட
இதை தான் படிக்கிறார்கள். ஏன் மற்ற முகலாய
அரசர்களுக்கு இல்லாத சிறப்பை நமது பள்ளி பாட புத்தகத்தில் அக்பருக்கு இருக்கு
என்று சற்று ஆய்வு செய்து பார்த்தால் தான் நமக்கு உண்மை
தெரிகிறது. அந்த உண்மைகள் இங்கு காண்போம்.
“தீனே இலாஹி” இந்தியாவை ஆண்ட
முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு, அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர்
இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி
இப்போது என்ன பேச்சு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? வேறு வழியில்லை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த ஒரு அயோக்கியனை
சிறந்த அரசர் என்று நம்மை நம்ம வைக்கிறார்கள். நமது குழந்தைகளையும் அதை படிக்க
வைக்கிறார்கள் இந்த இஸ்லாமிய விரோத போக்கு கொண்ட காவி அதிகார வர்கத்தினர்.
முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக
இந்து, முஸ்லிம்
கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்து
அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில
தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். அதேபோல் நாங்களும்
அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் “அக்பரே வாக்களிப்பட்ட மஹ்தி” என்றும்
எல்லாவற்றுக்கும் மேலாக “அக்பர் தான்
இமாமுல் முஜ்தஹித்” என்றும் நீருபிக்க
முனைந்தனர். அரசவைப் பிரதானிகளில் ஒருவரான சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன் என்றும்
தற்கால கலீஃபா என்றும் பூமியில்
இறைவனின் அவதாரம் என்றும்
பிரகடனப்படுத்தினார்.
அதன் அடிப்படைக் கொள்கை ‘லா இலாஹ இல்லல்லாஹ்
அக்பர் கலீஃபத்துல்லாஹ்’ என்பதாகும்.
(அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அக்பர் அவனது பிரதிநிதியாவார்). இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் “தீனே இலாஹி” யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.
இம்மதத்தைத் தழுவியவர்கள் “சேலர்” என
அழைக்கப்பட்டனர். அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் என்றனர். இஸ்லாத்துக்கு முரணான செயல்களான காலில் விழுதல், தீ வழிபாடு,
மாலைப் பொழுது கிரியைகள், அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்தல், மணி
அடித்தல், மும்மூர்த்திகளை வழிபடல் போன்ற கிரியைகள்
செய்தனர். பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது, அன்றாடம் நான்கு வேளை சூரிய
வழிபாடு செய்தனர். இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன.
வட்டி, சூதாட்டம், மதுவருந்துதல்
ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல்
கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது
இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக்
கருதப்பட்டது. இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன; அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.
அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கை இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும்
நோக்கோடு அமைக்கப்பட்டது. அரபு மொழியில்
இஸ்லாமியச் சட்டம், ஹதீஸ் ஆகிய
பாடங்கள் போதிப்பதற்கு அனுமதிக்கவில்லை.. இக்கலைகளை கற்றோர் செல்லாக்காசுகளாகவும்,
கீழ்த்தரமானவர்களாகவும், கருதப்பட்டனர். மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய
ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது. அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான
சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன. சரியான மார்க்க அறிஞர்கள்
நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை
ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப்
பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும்
மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது.
இந்த புதிய கொள்கையை ஒழித்து கட்ட அல்லாஹ் ஒரு மார்க்க அறிஞரை அனுப்பி
அவனுடைய மார்க்கத்தை காத்தான். யார் அந்த அறிஞர் இன்ஷாஅல்லாஹ் விரைவில்
பார்ப்போம்...
நமது பிள்ளைகளுக்கு வரலாறுகளின் முக்கியத்துவத்தை சொல்லி இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வளர்ப்பாம்.! இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!
நமது பிள்ளைகளுக்கு வரலாறுகளின் முக்கியத்துவத்தை சொல்லி இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வளர்ப்பாம்.! இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!