Monday, May 16, 2016

பத்ர் போர் (Battle of Badr)

         பத்ர் போர் என்றதும் நம்மில் பலருக்கு நினைவில் வருவது ரமலான் 17லும், குறைந்த படையைகொண்டு பெரும்படையை முஸ்லிம்கள் வென்றார்கள் என்பதும்தான். இதில் தவறேதும் இல்லை.

    ஆனால் அல்லாஹ் பத்ர் போரின் மூலம் இதற்கும் அதிகமான பல விஷயங்களை உலக மக்களுக்கு சொல்கிறான். குறைந்த அளவிலான படையை வைத்து பெரும்படையை வெற்றிக்கொள்ளும் பயிற்சியை முஹம்மது நபி (ஸல்) சஹாபாக்களுக்கு கற்றுகொடுக்கவில்லை. மாறாக அவர்களுக்கு இஸ்லாம் என்ற மார்க்கத்தை கற்று கொடுத்தார்கள்.

     பத்ர் போரில் 82 மக்காவாசிகளும் (முஹாஜிர்கள்) 231 மதினாவாசிகளும் (அன்சாரிகள்) இருந்தார்கள். முஹாஜிர்கள் தங்கள் ஊர் மற்றும் சொந்தங்களுக்கு எதிராக இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள். தங்களின் மேல் மட்டும் முழு நம்பிக்கை கொல்லாமல் அல்லாஹ் உதவி செய்வான் என்ற முழு மனதோடு போர்புரிந்தார்கள். அதுபோல் அல்லாஹ் உதவியுடன் வெற்றி கிடைத்தது.

பதர் வெற்றிக்கான காரணங்கள் சில....

1. தங்கள்மீதோ, ஆயுதங்கள்மீதோ நம்பிக்கை வைக்காமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

2. இஸ்லாத்திற்காக சொந்த பந்தங்கள் என்று பார்க்காமல் போர் புரிந்தார்கள்.

3. தங்கள் உயிரையும் தீனுல் இஸ்லாத்திற்காக தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

4. அமீர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் (தலைமையின்) கட்டளைகளுக்கு கட்டுபட்டார்கள்.

5. சிறப்பான திட்டமிடுதல்.

6. போர் ஒழுக்கமுறைகளை சரியாக பின்பற்றினார்கள் பெண்கள், குழந்தைகள், பெரியோர்களை தாக்காமலும். மரங்கள், கட்டிடங்களை தகர்க்காமலும் போர் புரிந்தார்கள்

Sunday, May 1, 2016

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்.

5. குவாடிலட் போர்:
        ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.

4. ஹைதீன் போர்:
        உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்...

3. அன்-ஜாலித் போர்:
      உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.

2. மக்கா வெற்றி :
    குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.

1. பத்ர் போர் :
    இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முன்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.

இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!