Sunday, May 17, 2015

சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) (கி.பி. 1137-1193)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

                   கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி ஹஜ்ரத் காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கி சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருஸ்துவ திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் ரோமப் பேரரசும், ஐரோப்பிய உலகமும் வெறி பிடித்துக் கதறியது, பழிவாங்க காத்திருந்தனர். ஒன்றல்ல... இரண்டல்ல.... சுமார் 450 ஆண்டுகள் கடந்தன..!

      11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும், குரோதமும் தலைக்கேரியதன் காரணமாக சக முஸ்லிமை அழிக்க ஐரோப்பிய திருச்சபைக்கு சிலர் அழைப்பு விடுத்து மாபெரும் பிழையை செய்தனர். இந்த வாய்பை பயன்படுத்திய அவர்கள் தங்களுடைய 450 வருட பழியை தீர்த்து ஜெருசலத்தை மீட்க களத்தில் இறங்கினர். சிலுவை போர் என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஜெருசலத்தை நோக்கி வந்தனர். வரும் வழியில் கண்ணில் கிடைக்கும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் அழிந்தனர். சரியாக 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தை சரியாக பேணாததின் விளைவு 1095 ஆம் ஆண்டு நமது (முஸ்லிகளின்) முதல் கிப்லா அவர்களின (கிருஸ்துவர்) கைக்கு சென்றது.

     முதல் கிப்லாவை இழந்த உலக முஸ்லிம் சமுகம் தனது நிலையை எண்ணி வருந்தியது, இழந்த நிலத்தையும், இறையில்லத்தையும் மீட்டிட 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர்.  இராக்கின் “சதாம் ஹுசைன்” பிறந்த அதே ஊரில் சரியாக கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்ந்து அத்துடன் சீரியாவின் உயர்தரமான மதரஸாவில் மார்க்கக் கல்வியோடு, வரலாறு, சட்டம், மானுடவியல், அரபு மொழி என பல துறையில் அறிவோடு விளங்கியதன் விளைவாக சாதாரண வீரன் என்ற நிலையிலிருந்து இராணுவ தளபதி என்ற நிலைக்கு உயந்தியது. ஜெருசலேத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வீரமும், விவேகமும், பொறுமையும் இவரை மீண்டும் தளபதியிலிருந்து எகிப்தின் கவர்னராக பதவி உயர்த்தியது. யார் அந்த மாவீரன்? “சுல்தான் சலாவுதீன் அய்யூபி”

      பொறுப்புக்கு வந்த உடன் சூடான், ஈராக், எகிப்து, சிரியா உள்ளிட்ட பகுதிகளை ஒருக்கிணைத்து முஸ்லிகளை உச்சகட்டப் போருக்கு ஆயத்தம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்துடன் தங்கி இராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, ஜெருசலத்தின் வரலாறு, ஜெருசலத்தை மீட்க வேண்டிய கடமை மற்றும் ஷஹிதால் கிடைக்கும் அந்தஸ்தை பற்றியும் சொல்லி ஒரு வலுவான இராணுவ வீரர்களை உருவாக்கினார். சலாவுதீன் அவர்கள் மிகப் பெரிய போருக்கு தயாராகிறார் என்பதை தெரித்து கொண்ட ஜெருசலமின் அரசன் “லுசிக்ணன்” என்பவன் முந்திக் கொண்டு சிரியா மீது தாக்குதல் கொடுக்க தயாரானான்.

       கி.பி. 1187 ஜுலை மாதம் 4ஆம் தேதி “டைபரியாஸ்” என்ற பகுதியில் இஸ்லாமிய இராணுவமும் லுசிக்ணன் இராணுவமும் மோதின. அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரன் சலாவுதீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. இச்செய்தி ஐரோப்பிய உலகை உலுக்கியது, போப் அர்பன் III  என்ற மத பீடத்தின் தலைவர் உட்பட பலர் மாரடைப்பால் மாண்டனர். கி.பி  1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்கலுக்கும்  பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

      போரிட்ட சிலுவைப் படையினர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து அதையும் சலாவுதீன் அய்யுபே செலுத்திவிட்டார். அது மட்டுமா அனைவரும் ஐரோப்பாவிற்கு செல்ல வாகன வசதியும் செய்துக்கொடுத்தார். வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நர்செயல்கள்  தான் இவரை மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.

     ஆனால் நன்றிகெட்ட ஐரோப்பா மீண்டும் படை திரட்டியது. பிரிட்டன் அரசர் ரிச்சர்ட் I  தலைமையில் மூன்றாவது சிலுவை யுத்தம் தொடங்கியது, வருகின்ற வழியில் வாழ்ந்த 3 ஆயிரதிர்ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு சலாவுதீன் படையும் பதிலடி கொடுந்தது முன் வரிசையில் வந்த சிலுவை படையினர் தூக்கிலிடபட்டனர். இரண்டு படைகளும் கி.பி 1191 செப்டம்பரில் மோதிக்கொண்டனர். முஸ்லிம் படையும் சில நேரங்களில் தோல்வியை தழுவியது அவர்களும் தோல்வியை தழுவினார்கள். போரின் இறுதியாக ரிச்சர்டின் சிலுவை யுத்த படை பின்வாங்கி சென்றது. ஜெருசலமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் முழுவதுமாக முஸ்லிம்களின் கைக்குள் வந்தது.

     ரீச்சர் திருப்பி செல்லும் வழியில் அவருடைய குதிரை இறந்த செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) தனக்கு எதிராக படை எடுத்து வந்த மன்னர் குதிரை இல்லாமல் இருக்கிறாரா என்று அவரை கௌரவிக்க மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் உயர்தரமான குதிரையை அனுப்பினார். இப்படி பட்ட உயரிய பண்புகள் கொண்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் கி.பி. 1193 ஆம் ஆண்டு மரணமடைதார். அந்நிலையில் அவர்விட்டு சென்ற அவருடைய சொத்து, 1 தங்க நாணயமும், 47 வெள்ளி நானயமும் தான்.

     மீண்டும் ஜெருசலத்தை கைபற்ற வேண்டும் என்று சிலுவை யுத்தகாரர்களின் வாரிசுகள் காத்துகடன்தனர். ஒரு நாள் ஒரு வருடம் இல்லை 700 வருடங்கள். 19ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டனர் இதனை பயன்படுத்து ஐரோப்பிய சிலுவை யுத்த வாரிசுகள் உதுமானியப் பேரரசை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டு  ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைபற்றிவிட்டனர்.

     கி.பி. 1917 இல் சிரியா சென்ற பிரிட்டிஸ் படை தளபதி எட்மன்ட் ஆலன் நேராக சுல்தான் சலாவுதீன் அய்யூபி அடக்கஸ்தலம் சென்று:      “Today The Wars Of Crusaders Are Completed” இன்றோடு சிலுவை யுத்தக்காரர்களின் போர் முடிவு பெற்றது என்று கூறினான். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned. My Presence  Here Consecrater The Victory Of The Cross Over Crescent” எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! புனிதத்தன்மை வாய்த என்னுடைய வருகையயின் மூலம் சிலுவை, பிறையை வென்றது. 700 வருட பகையை பாருங்கள்.... கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது. 

      யா அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்! பைத்துல் முகத்தஸ் மீட்கபட்டு இஸ்லாத்தின் மடியில் தவழ வேண்டும்.. இன்ஷாஅல்லாஹ் ...!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Sunday, May 3, 2015

சீன தேசமும் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்களும்.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

      பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயல்களும் அவர்களின் பெயர்களை வரலாற்று ஏடுகளில் உயர்த்திப் பிடிக்க காரணமாக இருத்தது. குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பல பயணங்கள் மேற்கொண்டவரின் இவர் முக்கியதுவம் வாய்த்தவர்.

      அபிசினியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்த மக்களில் இடம்பெற்ற இவர் அங்கு சிறுது காலம் வாழ்ந்தார். இவரோ இளம் சஹாபி இவரால் அங்கேயே இருக்க முடியவில்லை இஸ்லாம் மார்க்கத்தை இன்னும் பல தேசங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆர்வத்தில் தனது தந்தையின் வியாபார நாடுகளான சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளை தேர்வுசெய்து அபிசினியாவிலிருந்து புறப்பட்டார்.

     பாய்மரப் படகு செங்கடலில் இருந்து புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் வழியாக தமிழகத்திற்க்கும் இலங்கைக்கும் இடையே புகுந்து வங்கக்கடல் வழியாக கல்கத்தா அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிட்டாகாங் துறைமுகத்தை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய சஹாபிதான் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள். 

       சிறுது காலம் சிட்டாகாங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை எத்திவைத்து பிறகு சற்று மேலே உள்ள இடங்களான மணிப்பூர், மேகாலய, அஸ்ஸாம் அதன் தொடர்ச்சியாக சீனா சென்றடைத்தார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மக்காவில் பெருமானாரை விட்டுப் பிரிந்து அபிசினியாவிற்கு சென்ற ஆண்டு கி.பி 615 அதாவது அல்-குரான் வசனங்கள் இறங்கத் துவங்கி 5 ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. 

       கி.பி. 616--618 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனா சென்று சீன மக்களிடையே பெருகியிருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களையும் தவறு என விளக்கிக் கூறி பெருமானாரைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை சீன மக்களிடையே விதைத்தார்கள். கி.பி 623 ஆம் ஆண்டு அரபு வணிகர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு போய்விட்டதாக செய்தி வருகிறது. உடனடியாக ஸஅத் (ரலி) சீனாவிலிருந்து மதீனா திரும்பிவிட்டார்கள்.

      மதினா திரும்பிய ஸஅத் (ரலி) பத்ரு, உஹது போன்ற போர்களில் கலந்து தன்னுடைய வாழ்வை மதீனாவிலேயே தொடர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களில் மறைவுக்குப்பிறகு தொடர்ந்து அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களில் ஆட்சியில் இஸ்லாமிய இராணுவத்தில் பணியாற்றினார். 

       கி.பி. 650 இல் உதுமான் (ரலி) அவர்களின் இஸ்லாமிய அரசின்போது உலகில் மிகப்பெரும் பேரரசுகளின் ஒன்றான சீனாவிற்கு ஸஅத் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள். ஏற்கனவே சீனாவிற்கு வந்திருந்த அனுபவமும் சீனா மக்களின் பழக்க வழக்கங்களையும் நன்றாக அறிந்துருந்த ஸஅத் (ரலி) அவர்கள் இப்போது இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக கி.பி. 650 இல் மீண்டும் சீனா வந்தார்கள். 

       இந்த முறை முழு குரானுடன் வந்த ஸஅத் (ரலி) அவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் அதன் பிறகு அரபு வணிகர்களின் அழைப்புப் பனியின் காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் ஆழமாக வேருர்று இருந்ததை கண்டார்கள். சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாசானகிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி கேட்டு “கேன்டன்” நகரில் அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் தான் இன்றைக்கும் அந்நகரில் “ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மெமோரியல் மஸ்ஜித்” என்றும் “Huaisheng Mosque” என்றும் அழைகப்படுகிறது.

      சீனர்களுக்கு அரபி பெயர்களை உச்சரிக்க கடினமாக இருந்ததால் “ஹசன்” என்ற பெயரை “ஹாய்” என்றும் “ஹுசைன்” என்பதை “ஹுய்” என்றும் சுருக்கி அழைத்தனர். இதே போல இப்பள்ளியையும் சுருக்கி  Huaisheng Si என்று அழைக்கின்றனர்.  

நம் குழந்தைகளும், நாமும் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்கவேண்டிய வரலாறு.