Monday, November 28, 2011

நம்மை விட்டு செல்லும் லால்பேட்டை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... 
               30,000 மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் நமது லால்பேட்டையில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள்  14,000 த்திற்க்கும் மேற்பட்டவர்கள்,  ஆனால் அரசு படிவேட்டில் 9,592 நபர்கள் மட்டும் தான் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என பதிவாகியுள்ளது. கடந்த 19/10/2011 அன்று நடந்த நமதூர் பேரூராட்சி மன்ற தேர்தலில் வாக்களித்த மக்கள் வெறும் 6229, அதாவது மொத்த மக்கள் தொகையில் 20.7%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில்  44.5%,  அரசு படிவேட்டிலில் உள்ளவர்களில்  64.9%.
      இந்த தேர்தலின் முடிவு கடந்த 21/10/11 அன்று வெளியானது, இதில் 2,200 வாக்குகள் பெற்று (ADMK).தி.மு. வின் சபியுல்லா வெற்றி பெற்றார், இரண்டாம் இடம் (M.M.K).. வின் யாசர் அரஃபாத், மூண்றாம் இடம் முருகேசன்.
               இங்கு நாம் கவனிக்க வேண்டியது நான்கு விஷயங்களை, ஒன்று வெற்றி பெற்ற வேட்பாளர் வாங்கிய ஓட்டு 2,200 அதாவது மொத்த மக்கள் தொகையில் 7.3%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் 15.7%, வாக்களித்தவர்களில் வெறும்  22.9% தான். வெறும் 22.9% ஓட்டுக்கள்  மட்டும் பெற்று வெற்றி பெற்ற ஒருவர் 30,000 மக்களுக்கு தலைவர், அதாவது 77.1% மக்களுக்கு பிடிக்காதவர் (அல்லது) 77.1% மக்கள் இவருக்கு ஆதரவு தரவில்லை. இரண்டாவது 30,000 மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் நமது ஊரில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 3ஆம் இடத்தை பிடித்தது இந்து மத சகோதரர், மூண்றாவது காலம் காலமாக ஒற்றுமையுடன் நம் மக்கள் பள்ளிவாசல் மூலமாகவும், ஜமாத் மூலமாக தேர்ந்தெடுத்த மக்களாட்சி சென்று ஆளும் அரசாட்சி வந்துவிட்டது, நான்காவது 15வார்டுகள்  கொண்ட  நமது லால்பேட்டையில் 4வார்டுகளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் கைப்பற்றிவிட்டார்க்கள்.
      இதற்கு காரணம் என்ன என்று நாம் சிந்தனை செய்து பார்த்தோமா!!! ஒற்றுமை இல்லாமையும், தெருவுக்கு ஒரு வேட்பாளர் என களத்தில் இறங்கியதுதான் காரணமாக இருக்கமுடியும். இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்த நாம் சிறு, சிறு விஷயங்களுக்கொல்லாம் மோதி இப்போது எந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டோம் என்று தயவு செய்து சிந்தியுங்கள். இனிவரும் காலங்களிளாவது சிந்தித்து செயல்படுவோம்.... இன்ஷா அல்லாஹ்....
www.imdtime.org

Sunday, November 27, 2011

இறைவன் படைத்த இயற்கையை பாதுகாப்போம்….

அல்லாஹ்வையும் அல்லாஹ் படைத்த இயற்கையும் மனிதன் மறந்தான். அதனால் பெரும் துன்பங்களுக்கு மனித சமுதயாம் ஆளாகிக் கொண்டு இருக்கிறது.

மரங்கள் அல்லாஹ் படைத்த இயற்கையின் அருட்கொடைகள்.

மரம் வளர்ப்பின் அவசியமும் நன்மைகளும்:
1. உயிர் வாழ்க்கைக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற நீரும், மூச்சுக்காற்றும் மரங்கள் வழியாக தான் நாம் பெற வேண்டி உள்ளது.

2. மரம் வளர்ப்பின் மூலம் நாம் நேரடியான பலங்களைவிட மறைமுகமான பலன்கள் அதிகமாக உள்ளது.
3. 50 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் ரூ.5.30 இலட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகின்றது. ரூ.6.40 இலட்சம் மதிப்புள்ள அரிப்பை தடுக்கின்றது, ரூ.10.00 இலட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது, ரூ.10.30 இலட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது, ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 1000 கீலோ. மரம் வளர்ப்பவர்களுக்கு உடனடி நன்மைகள் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் சிறந்த பலன்கள் அவர்கள் அடையலாம். இந்த சமுதாயத்துக்கு நிரந்தர நன்மைகளையும் கிடைக்கும்படி செய்யலாம். மனிதன் தான் வளர்ந்த மரங்களின் மூலம் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விதத்தில் அல்லாஹ் மரம் வளர்ப்பின் மூலம் நன்மைகள் கிடைக்க செய்கின்றான்.

நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (அல்-குர்ஆன் 14:24,25)
“மரங்கள் அல்லாஹ் படைந்த இயற்கையின் வரங்கள்”
“மனித நேயம் மலர மண் வளம் காக்க மரங்களை வளருங்கள்”
. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. (அல்-குர்ஆன் 16:10)
“தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்”
“மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்”
“எனவே மரம் வளர்ப்போம்-உயிரினங்களைப் பாதுகாப்போம்”
நமது வீடுகளிலும், தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும், மானாவாரி நிலத்திலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மரம் வளர்ப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவோம். இயற்கயை பாதுகாப்போம், இனிய சுகத்தை அனுபவிப்போம்! இன்ஷா அல்லாஹ்….