Friday, June 17, 2016

சகோதரர் அஹமது தீதாத் (1918-1942)

            “அஹமது ஹுசைன் தீதாத்” அவர்கள் ஜுலை 1, 1918 நில் குஜராத் (இந்தியா) தில் பிறந்து பிறகு தென் ஆப்பிக்காவில் தனது பெற்றோர்களுடன் வசித்தார். 1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் இஸ்லாம் வாலால்பரப்பபட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார். இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!

சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் துவங்கிய போது வெறும் 15 நபர்களே கலந்துக் கொண்டார்களாம். தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை. சில காலங்களுக்குப் பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க், கேப்-டவுன் நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது (அல்ஹம்துலில்லாஹ்).  இவர் துண்டுப்பிரச்சுரம், ஜும்ஆ பேருரை போன்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும், கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.

இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர்  1956-1986:
இவரது பேச்சாற்றலையும், தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு “இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர்” என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்! 1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட்” என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.

இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் “பிப்லிகள் தியோலஜி” பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.  பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்!  இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்!  இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!

1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார். 1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால்என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார். 1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு கிங் பைஷல் அவார்டுகிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!

இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!

இஸ்லாமிய தாவா பணிக்காக இவர் சவுதி ஆரேபியா, எகிப்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத்தீவுகள், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணித்தார்.

மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது கையின் ஏற்பட்டது. இதனால் சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்!  இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது. இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்.

இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார். அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்).  இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது!

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காக பாடுபட்டுச்சென்றார்! இவரது பாணியில் நாமும் நமது வாழ்க்கைப்பயணத்தை துவக்குவோம்! பிரிந்துகிடக்கும் நம் ஜமாஆத் மக்களிடம் இணைப்பை ஏற்படுத்துவோம் மரணம் வரை முஸ்லிம் என்று சொல்வோம். இன்ஷாஅல்லாஹ்.!!

Wednesday, June 1, 2016

தேடுவோம் அந்த நாளை.!

நபர் 1: உனக்கு விசயம் தெரியுமா? ஒரு நாளில் 83 வருடம் செய்யும் நன்மைக்கு சமமான நன்மை கிடைக்குமாம்?
நபர் 2: என்ன ஆச்சரியம் நாம் 83 வருடம் வாழ்வதே அறிதாக உள்ளது. ஒரு நாளில் செய்யும் நன்மை 83 வருடம் 4 மாதம் செய்த கூலி (நன்மை)க்கு சமமாக கிடைக்குதா….. என்ன ஆச்சரியம் சரி அந்த நாள் எப்பவரும், சிக்கிரம் செல்லு..?

நபர் 1: சொல்லுறேன்.! அது நமக்கு மிகவும் அருகில் உள்ளது..!
நபர் 2: சரி சொல்லுங்க,எந்த நாள் அது? யார் அவ்வளவு கூலி (நன்மை)தரேன்னு சென்னா…!

நபர் 1: இது மனிதன் சொன்ன வாக்கு இல்ல மாறி பொசுறதுக்கு, மாறாக நம்மை படைத்த ஏக இறைவனான அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் கூறியுள்ளான்….
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். [ஸூரத்துல் கத்ரி 97:1-5].
நபர் 2: அட ஆம்மா அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததா…! நாம் வாழ்நாள் முழுவதும் செய்தாள் கூட இவ்வளவு சிறந்த இரவுடைய நன்மையை அடைய முடியாது பொலருக்கே….! அந்த நாள் எப்பங்க வரும் சிக்கிரம் சொல்லுங்க எனக்கு தலையே வெடிச்சிடம் போலருக்கு அந்த நாளை நலுவவிட கூடாது.
நபர் 1: அந்த நாளா சொல்லுற கேழுங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ……..எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்!…… இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி தமிழாக்கம் 2016)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி தமிழாக்கம் 2017)

நபர் 2: சரி நல்ல விசயம் சொன்ன… இன்ஷாஅல்லாஹ் நான் இந்த ஐந்து இரவுகளிலும் லைலத்துல் கத்ரைத் தேடுறேன், அதிகமாக அல்லாஹ்வை வனங்குகிறேன், திக்ர் செய்ற, அதிகமாக குர் ஆனை ஒதுறேன்.. சரி பிறகு சந்திப்போம். அல்லாஹ் உனக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக!