Wednesday, June 1, 2016

தேடுவோம் அந்த நாளை.!

நபர் 1: உனக்கு விசயம் தெரியுமா? ஒரு நாளில் 83 வருடம் செய்யும் நன்மைக்கு சமமான நன்மை கிடைக்குமாம்?
நபர் 2: என்ன ஆச்சரியம் நாம் 83 வருடம் வாழ்வதே அறிதாக உள்ளது. ஒரு நாளில் செய்யும் நன்மை 83 வருடம் 4 மாதம் செய்த கூலி (நன்மை)க்கு சமமாக கிடைக்குதா….. என்ன ஆச்சரியம் சரி அந்த நாள் எப்பவரும், சிக்கிரம் செல்லு..?

நபர் 1: சொல்லுறேன்.! அது நமக்கு மிகவும் அருகில் உள்ளது..!
நபர் 2: சரி சொல்லுங்க,எந்த நாள் அது? யார் அவ்வளவு கூலி (நன்மை)தரேன்னு சென்னா…!

நபர் 1: இது மனிதன் சொன்ன வாக்கு இல்ல மாறி பொசுறதுக்கு, மாறாக நம்மை படைத்த ஏக இறைவனான அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் கூறியுள்ளான்….
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். [ஸூரத்துல் கத்ரி 97:1-5].
நபர் 2: அட ஆம்மா அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததா…! நாம் வாழ்நாள் முழுவதும் செய்தாள் கூட இவ்வளவு சிறந்த இரவுடைய நன்மையை அடைய முடியாது பொலருக்கே….! அந்த நாள் எப்பங்க வரும் சிக்கிரம் சொல்லுங்க எனக்கு தலையே வெடிச்சிடம் போலருக்கு அந்த நாளை நலுவவிட கூடாது.
நபர் 1: அந்த நாளா சொல்லுற கேழுங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ……..எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்!…… இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி தமிழாக்கம் 2016)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி தமிழாக்கம் 2017)

நபர் 2: சரி நல்ல விசயம் சொன்ன… இன்ஷாஅல்லாஹ் நான் இந்த ஐந்து இரவுகளிலும் லைலத்துல் கத்ரைத் தேடுறேன், அதிகமாக அல்லாஹ்வை வனங்குகிறேன், திக்ர் செய்ற, அதிகமாக குர் ஆனை ஒதுறேன்.. சரி பிறகு சந்திப்போம். அல்லாஹ் உனக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக!

No comments:

Post a Comment