Monday, May 16, 2016

பத்ர் போர் (Battle of Badr)

         பத்ர் போர் என்றதும் நம்மில் பலருக்கு நினைவில் வருவது ரமலான் 17லும், குறைந்த படையைகொண்டு பெரும்படையை முஸ்லிம்கள் வென்றார்கள் என்பதும்தான். இதில் தவறேதும் இல்லை.

    ஆனால் அல்லாஹ் பத்ர் போரின் மூலம் இதற்கும் அதிகமான பல விஷயங்களை உலக மக்களுக்கு சொல்கிறான். குறைந்த அளவிலான படையை வைத்து பெரும்படையை வெற்றிக்கொள்ளும் பயிற்சியை முஹம்மது நபி (ஸல்) சஹாபாக்களுக்கு கற்றுகொடுக்கவில்லை. மாறாக அவர்களுக்கு இஸ்லாம் என்ற மார்க்கத்தை கற்று கொடுத்தார்கள்.

     பத்ர் போரில் 82 மக்காவாசிகளும் (முஹாஜிர்கள்) 231 மதினாவாசிகளும் (அன்சாரிகள்) இருந்தார்கள். முஹாஜிர்கள் தங்கள் ஊர் மற்றும் சொந்தங்களுக்கு எதிராக இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள். தங்களின் மேல் மட்டும் முழு நம்பிக்கை கொல்லாமல் அல்லாஹ் உதவி செய்வான் என்ற முழு மனதோடு போர்புரிந்தார்கள். அதுபோல் அல்லாஹ் உதவியுடன் வெற்றி கிடைத்தது.

பதர் வெற்றிக்கான காரணங்கள் சில....

1. தங்கள்மீதோ, ஆயுதங்கள்மீதோ நம்பிக்கை வைக்காமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

2. இஸ்லாத்திற்காக சொந்த பந்தங்கள் என்று பார்க்காமல் போர் புரிந்தார்கள்.

3. தங்கள் உயிரையும் தீனுல் இஸ்லாத்திற்காக தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

4. அமீர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் (தலைமையின்) கட்டளைகளுக்கு கட்டுபட்டார்கள்.

5. சிறப்பான திட்டமிடுதல்.

6. போர் ஒழுக்கமுறைகளை சரியாக பின்பற்றினார்கள் பெண்கள், குழந்தைகள், பெரியோர்களை தாக்காமலும். மரங்கள், கட்டிடங்களை தகர்க்காமலும் போர் புரிந்தார்கள்

No comments:

Post a Comment