முஸ்லிம்களின்
மார்கோ போலோ என்று அழைக்கப்படும் இவர் கி.பி 13௦4 ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டில் பிறந்தவர்.
தன்னுடைய 21 ஆம் வயதில் ஹஜ்ஜிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தால் உலகில் உள்ள
முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் செல்லவேண்டும் என்று முடிவு செய்தார்.
தன்னுடைய இந்த என்னத்தை நிறைவேற்ற தொடர்ந்து
29 ஆண்டுகள் தொடர் பிரயாணம் மேற்கொண்டு 44 நாடுகளுக்கு படகு, குதிரை, ஒட்டகம் மற்றும்
கால்நடையாக பயணம் மேற்கொண்டார்.
தன்னுடைய பயணத்தின் முடிவாக 29 ஆண்டுகளுக்கு பிறகு
தன்னுடைய சொந்த நாடான மொரோக்கோவில் இறுதிகாலத்தை கழித்த போது தான் சென்ற நாடுகளின்
வாழ்ந்த மக்கள், கலாச்சாரம் மற்றும் அந்த நாடுகளை பற்றிய குறிப்புகளை புத்தகங்களாக (The Rihla) பதிவு செய்தார். இந்த புத்தகம் பிற்காலத்தில் வாழ்த்த
வணிகர்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
விமானம், இரயில், பிரமாண்டமான கப்பல் போன்ற எதுவும்
இல்லாத அந்த 13ஆம் நூற்றாண்டில் இவர் பயணம் செய்த தூராம் எவ்வளவு தெரியுமா? சுமார்
1,17,000 கி.மி...! சற்று சிந்தனை செய்து பாருங்கள். இவருடைய நினைவாகத்தான்
துபாயில் உள்ள ஒரு பிரமாண்டமான மாலுக்கு
இப்னு பதூதா மால் (Ibn
Battuta Mall) என்று பெயர் வைத்துள்ளார்கள்.....
நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற சாதனையாளர்களின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!
No comments:
Post a Comment