Friday, January 16, 2015

உலகின் கருப்பு நாள் (World Black Day)

 அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

      இந்தியாவின் கருப்பு நாள் தெரியும், அது என்ன உலகின் கருப்பு நாள் என்று நம்மில் மெரும்பாலருக்கு புதியதாக தெரியும் ஆனால் இது புதுசு இல்லை. யூத, நசரானிகளின் 300 ஆண்டின் திட்டத்தின் பதில்தான் இந்த நாள். ஆம்!

       1924 மார்ச் 3ஆம் தேதி உலக முஸ்லிம்களின் உள்ளத்தில் பிரளயம் ஏற்ப்பட்ட நாள். தங்களது மார்க்க, சமுக வாழ்விற்கு பொறுப்பேற்று இருந்த முஸ்லிம்களின் உலகத் தலைமையான (உதுமானிய) கிலாஃபத் கலைக்கப்பட்ட நாள்.
       ஒரு ஊரில் இரண்டே இரண்டு முஸ்லிம்கள் இருந்தால் கூட அதில் தகுதியுள்ள ஒருவரின் தலைமையில் தான் அடுத்தவர் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய சமுக அரசியல் கோட்பாடு. வரலாறு முழுக்க எதாவது ஒரு வகையில் தங்களுக்காக ஒரு ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்த உலக முஸ்லிம் சமுகம், 1924 இல் தலைமையே இல்லாத சமுகமாக, தாறுமாறாக பிளவுப்பட்ட சமுகமாக மாற்றப்பட்ட நாள்.

       முஸ்லிம்களின் உலகத் தலைமையை விழ்த்த வேண்டும் என்ற இலக்கோடு யுத, நசரானிகள் மூன்று நூற்றாண்டுகளாக உண்ணாமல், உறங்காமல் அதற்காகவே உழைத்து பலவிதமான சதித்திட்டங்களை நிறைவேற்றி கிலாஃபத்தை வீழ்த்திய நாள்....

        நமது பிள்ளைகளுக்கு இது போன்ற வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!


No comments:

Post a Comment