நல்ல ஆட்சி வராதா? என்று மக்கள் ஏங்கினர்,
பக்கத்து பிராந்திய கவர்னர்கள் கூட இவனை ஒழிக்க யாரும் வரமாட்டர்களா என்று
எதிர்ப்பார்த்த காலம். எந்த அளவு கொடுமையான ஆட்சி என்றால் அந்த நாட்டுக்கு
செல்லும் மக்களின் பணம், பொருள் ஏன் கரப்பைக்கூட சூறையாடும் ஒரு கொடுமையான கவர்னர்
தான் இந்த விசிகோத் மன்னன் ரோட்ரிக்ஸ்.
பக்கத்து
கண்டமான ஆப்ரிக்காவில் அமைதியான இஸ்லாமிய ஆட்சி நடப்பதை பார்த்த அவர்கள் எங்கள்
நாட்டுக்கு வந்த நியாயமான ஆட்சி செய்யுங்கள் என்று கேட்டுகொன்டத்தில் இணங்க விசிகோத்
மன்னன் ரோட்ரிக்ஸ்க்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர்
இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் வெறும் 7,000
படைவிரர்களுடன் சுமார் 1,00,000 எதிரி
படைகளை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கியது.
1. வெற்றிக்கு
பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.
2. இஸ்லாமியர்களின்
800 வருட ஆட்சியில் இன்றைய ஸ்பெயின் பெயர் அல்-அந்தலூஸியா.
3. தாரிக்
பின் ஜியாத் அவர்கள் தங்கியதால் தான் இந்த இடத்துக்கு “ஜமல் அல் தாரிக்” என்று
பெயர் வந்த்தது, அது காலப்போக்கில் ஜிப்ரால்டிஸ் என்று மாறிவிட்டது.
4. இந்த 800 வருட இஸ்லாமிய
ஸ்பெயினில் அறிவியல்ஆய்வுகளில் ஈடுபட்ட முஸ்லிம்கள் உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளாக
திகழ்ந்தார்கள்.
5. அல்-அந்தலூஸியா
(ஸ்பெயின்) முதல் இஸ்லாமிய கவர்னராக வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் திகழ்ந்தார்.
6. இந்த
வரலாற்று சிறப்புமிக்க போரை “குவாடிலட் போர்” என்று அழைக்கப்படுகிறது.
7. இந்த
போரில் முஸ்லிம் தரப்பில் 3,000 அதிகமானோர் சாஹிதனார்கள்.
வீரத்தளபதி
தாரிக் பின் ஜியாத் அவர்களின் தியாகம் நமக்கு ஒரு முன்மாதிரி. பிர்க்கலத்தில்
ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அது ஒரு
எச்சரிக்கையும் கூட...!
No comments:
Post a Comment