அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு முஸா அல் குவாஜிரிமி தலைசிறந்த கணித
மேதையாவார். 1, 2, 3 என்ற
எண்முறைக் கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிற்கு அறிமுகமானது. இதனை
ஆங்கிலத்தில் (Algorithm) என்று அழைக்கின்றோம். அல் குவாரிஜிமி என்ற
பெயரே மாறி அல்கோரிதம் என்று அழைக்கப்படுகிறது. இவர் அல்ஜிப்ரா என்ற கணிதவியலில்
தந்தை என அழைக்கப்படுகிறார்.
இவர் கிதாப் அல்-ஜபர் வல் முகாபலா “Al-Kitab
al-Jabr wal mugabala” (Book on calculations by completion and balancing) என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அல்-ஜபர் என்ற
அரபி சொல்லே இன்று அல்ஜிப்ரா (Algebra) என்று சொல்லப்படுகிறது. இவரது கணித முறைகள்
கிரேக்க இந்திய அறிவுதொகுதிகளுடன் இணைக்கப் பட்டுயிருந்தன.
மத்திய கால மேதைகளுள் எவரும் கைகொள்ளாத
கணிதவியலின் புதிய சிந்தனைகளை இவர் கொண்டுயிருந்தார் என்று “பிலிப் ஹிட்டி“ எனும்
அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கணித மேதையான பிரகுப்தாவின் “0” புஜ்ஜியதையும் அரபு எங்களையும் ஒன்று இணைத்து
இவர் கண்டுபிடித்த எங்கள் தான் இன்று உலக முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
இதனாலேயே இந்த எண்களுக்கு இந்டோ-அரப் எண்கள் என்று பெயர் வந்தது.
இவர் இதை கண்டுபிடிக்கவில்லை என்றால் நாம் 1984 என்ற என்னை MCMLXXIV என்று எழுதியிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment