Friday, January 1, 2016

கருப்பு தங்கம் மான்ஸா மூஸா (கி.பி 1280-1337)

        14 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தன் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் பின்பற்றி வாழ்ந்து, மாலி பேரரசின் மாபெரும் அரசராக திகழ்ந்து “கருப்பு தங்கமான” மான்ஸா மூஸா உலகையே தன் வசம் ஈர்த்தார்.

    ஆப்ரிக்க கண்ட வரலாற்றில் மாபெரும் பேரரசு என்றால், அதுவும் அறிவுப் பேரரசு என்றால் அது மான்ஸா மூஸா ஆண்ட அந்த 25 ஆண்டுகால மாலிப் பேரரசுதான். ஆயிரக்கணக்கான தங்க சுரங்கங்களை கொண்ட மாலியின் ஆட்சியாளரான இவர் இஸ்லாமிய மார்க்கத்தில் மிகுந்த பிடிப்பும், பேணுதலும் உடையவராக இருந்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தன் வாழ்நாளில் அல்லாஹ்வுடைய தூது செய்தியான இஸ்லாத்தை இந்த உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும், மாலியை இந்த உலகம் திரும்பி பார்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

     இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும், மாலிப் பேரரசின் மீதும், உலகத்தின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற தீராத தாகத்தோடு காத்திருந்த மான்ஸா மூஸாவுக்கு ஒரு பொன்னான சிந்தனை தோன்றியது. கி.பி 1324 ஆம் ஆண்டிற்கான ஹஜ்ஜை பயன்படுத்தினார், மாலியில் ஹஜ் பயணக் கூட்டம் தயாராகி நின்றது. மான்ஸா மூஸா முதலில் ஒட்டகத்தில் அமர, அவருக்குப் பின்னால் 60,000 மக்கள் உயர்தரமான ஆடைகள் அணிந்து நின்றனர். மேலும் 60 ஒட்டகங்களில் 2000 கிலோ தங்கக் கட்டிகள், 300 பவுண்ட் எடை கொண்ட சுத்திகரிக்கப்படாத தங்கக் துகள்கள், 12 ஆயிரம் பணியாளர்கள் என்று ஒரு பெரும் நகரமே புனித மக்கா நோக்கி நகர்ந்து வரத் துவங்கியது.

            மக்கள் கூட்டம் கூட்டமாக கூடிநின்று மான்ஸா மூஸா அவர்களின் ஹஜ் பயணக் குழுவை வியந்து பார்த்தனர். செல்லுகின்ற வழியெல்லாம் வாழ்ந்த மக்களுக்கு இவர் தங்கக் கட்டிகளையும், தங்கக் துகள்களை இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். வழியில் எந்த எந்த ஊரில் கூடாரம் அமைத்து தங்கினார்களோ அங்கேயெல்லாம் அல்லாஹ்வை வணங்கிட மஸ்ஜிதை கட்டினார். எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இவர் அள்ளிக் கொடுத்த தங்கத்திற்கு அளவே இல்லை. இப்படி இலவசமாக வாரி இறைத்த தங்கத்தினால் அடுத்த 13 ஆண்டுகளுக்கு மேல் எகிப்தில் தங்கத்திற்கு மதிப்பு இல்லாமல் போய் மக்கள் தங்கத்தை வெறுக்கும் அளவிற்கு போனதாம்.

      இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், அவர் வாரி வழங்கிய தங்கம் குறித்தும் தான் உலகம் முழுவதும் பேச்சாக இருந்தது. ஆப்பிரிக்காவே அதிர்ந்தது, ஐரோப்பா ஆச்சரியத்தில் மூழ்கியது. இஸ்லாமிய உலகமே இவருடைய ஹஜ் பயணத்தை பார்ந்து வியந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வணிகர்கள் மாலியில் குவிந்தனர். மாலியில் வியாபாரம் பெரும் அளவில் பெருகத் துவங்கியது. 

      மாலிப் பேரரசை இஸ்லாமியக் கல்வியில் மிக உயர்ந்த பீடமாக உருவாக்க வேண்டும் என்ற வேட்கையில் மக்காவிலிருந்து திருப்பும் போது இஸ்லாமிய உலகின் தலை சிறந்த கல்வியாளர்களையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் மாலிக்கு அழைத்து வந்து, திம்புக்த்து நகரில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கு உத்தரவிட்டார். அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகம் தான் “ஜாமியா திம்புக்த்து” என்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகம்.

      பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றும் மதரஷா பட்டதாரிகள் 5 வேளை தொழுகையை மட்டும் நிறைவேற்றி விட்டு மிகுதியான நேரத்தை வீணாக்குவதை கண்டார், பெரும் எண்ணிக்கையிலான மனித ஆற்றல் மற்றும் அறிவாற்றல் வினாகுவதை உணர்ந்தார். இமாம்கள் எஞ்சிய நேரத்தை பயனுள்ள வகையில் நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் மேன்மைக்கும் பயன்படுத்திட வேண்டும் என்று மூஸா அவர்கள் முடிவு செய்தார்.

     மாலிப் பேரரசு முழுவதும் உள்ள சிறிய அளவிலான குர்ஆன்  பாடசாலைகளை இணைத்து ஒரே பாடத் திட்டமாக, ஒரே பயிற்றுவிப்பு மற்றும் ஒரே கால அளவு முறையாக முதலில் மாற்றி அமைத்து, அதை உயர் கல்வி நிறுவனமான ஜாமியா திம்புக்த்துவில் இணைத்து முஸ்லிம்களின் உயர் கல்வியை வலிமையானதாக, உலகை வெல்லும் கல்வி முறையாக மாற்றினார். இதன் மூலம் மாலிப் பேரரசுலிருந்து  அறிவும் ஆற்றலும் பொருந்திய சமூக, அறிவியல், தொழில்நுட்ப, விஞ்ஞானிகளை உருவாக்கிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி, இதற்காகவே ஜாமியாவின் பாடத் திட்டங்களை உலகத் தரத்திற்கு மாற்றி அமைத்தார்.
    
   இவருடைய திட்டத்தால் உலகம் முழுவதும் ஜாமியா திம்புக்த்துவின் கல்வித்திறன் எதிரொலித்தது. உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் மாலிப் பேரரசின் திம்புக்த்து நகர் நோக்கி கல்வி பயில வந்தனர். அவர் அன்று ஏற்படுத்திய புரச்சி இன்றைக்கும் மாலி என்றாலே “ஆப்பிரிக்காவின் இஸ்லாமிய கல்வியின் தலைமை பீடம்” என்று வரலாறு பதிவாக்கி வைத்துள்ளது.

      கி.பி 1330 இல் ஒரு இலட்சம் மக்கள் தொகை கொண்ட திம்புக்த்து நகரில் அமைத்திருந்த ஜாமியாவில் 25,௦௦௦ மாணவர்கள் கல்வி பயின்றார்கள். இப்பொழுதும் ஜாமியா திம்புக்த்து பெயல்பட்டு வருகிறது. அவர் மரணித்து 7௦௦ ஆண்டுகள் கடந்த போதிலும் மாலி என்றாலே இஸ்லாத்துடன் இணைந்த தொழிற்கல்வியின் தலைமைபீடம் என்று ஆப்ரிக்க மக்கள் தங்களது தங்கத் தலைவனைப் போற்றிக் புகழ்கின்றனர். இவரால் உயிரூட்டப்பட்ட மாலியின் வளர்ச்சி பணிகள் மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணிகள் அடுத்து வந்த 150 ஆண்டுகளுக்கு மாலியை ஆப்பிரிக்காவின் தலைமை பீடமாக மாற்றியது.

     மான்ஸ மூஸா மரணித்து 12 ஆண்டுகள் கழித்து மாலிக்கு சென்ற உலகை சுற்றிய கடல் பயணி “இப்னு பதூதா”  தனது பயணக் குறிப்பில் “வலிமையான ஆட்சியாளராகவும், வளமிக்க நாட்டின் அதிபாராகவும், எதிரிகள் கண்டு நடுங்கிய மாவிரனாகவும், இறை பக்கியும், ஈகை குணமும் உடைய மனித நேயராக வாழ்ந்துள்ளார் மான்ஸ மூஸா. இவர் ஆட்சியில் மாலி முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு, உயந்த நீதி கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் கூட இவ்வுலகில் வாழ்ந்த பெரும் பானக்காரர்களில் இவரே முதலிடம்.


       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

No comments:

Post a Comment