Wednesday, March 18, 2015

அர்ஷிFப் போர் களம் (Battle of Arsuf)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
       
          இன்று (07-09-1191) கி.பி 1191 ஆம் ஆண்டு “அர்ஷிfப்” என்ற இடத்தில் கி.பி. 1187லில் முஸ்லிம்களிடம் இழந்த ஜெருசலத்தை கைப்பற்ற பிரிட்டன் அரசர் ரிச்சர்ட் I தலைமையில் மூன்றாவது சிலுவை யுத்தம் தொடங்கியது.

                        வருகின்ற வழியில் வாழ்ந்த 3 ஆயிரதிர்ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்க சலாவுதீன் அய்யுபி (ரஹ்) அவர்களும் படையை திரட்டினார். முஸ்லிம் படையும் சில நேரங்களில் தோல்வியை தழுவியது அவர்களும் தோல்வியை தழுவினார்கள்.

                         ரீச்சர் திருப்பி செல்லும் வழியில் அவருடைய குதிரை இறந்த செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) தனக்கு எதிராக படை எடுத்து வந்த மன்னர் குதிரை இல்லாமல் இருக்கிறாரா என்று அவரை கௌரவிக்க மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் உயர்தரமான குதிரையை அனுப்பினார்.

                         வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நர்செயல்கள் தான் இவரை மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.

          நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

No comments:

Post a Comment