Friday, January 15, 2016

பிரான்சால் பாராட்டப்பட்ட ஜிஹாதி

          19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி!  ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஒருவர், பின்னர் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும், பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல.

        “அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி” ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 1808 ஆம் ஆண்டு பிறந்து இளம் வயதிலேயே அல்-குரானை மனனம் செய்து இஸ்லாமியக் கல்வியையும் கற்ற மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார். 1825 ஆம் ஆண்டு மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, பல்வேறு அரபு நாடுகளில் பிரயாணம் செய்து விட்டு பல வருடங்கள் கழித்து நாடு திரும்பிய போது தனது தாய்நாடான அல்ஜீரியாவை பிரஞ்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இன்று உலகில் நல்லவர்கள் என்பது போல் காட்டிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் உலகம் முழுவதும் நிகழ்த்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை.

            வெறும் 22 வயதில் ஆக்கிரமிப்புக்கு எதிராக களம் இறங்கினார் அப்துல் காதிர். போர்க்களில் அனுபவம் ஏதுமின்றி களத்தில் குதித்து வல்லரசுகளில் ஒன்றான பிரான்சை எதிர்த்துப் போரிடும் சாதாரண பணியில்லை. ஆனாலும் உறுதி பூண்டார், களம் கண்டார்,  தனித்தனி குழுவாக இருந்த அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு படையை அமைத்தார். இதுவே அவர்களின் முதல் வெற்றி !!!

              1842 வரை தொடர்ந்த தாக்குதல்களில் சில இடங்களில் இவரது படைகளும் சில இடங்களில் பிரஞ்சுப் படைகள் வெற்றி பெற்றன. பிரஞ்சுப் படைகள் நிறைய இடங்களில் சமாதான உடன்படிக்கைகளை மீறி தாக்குதல் நடந்தியது.

                நவீன ஆயுதங்களும், பணபலமும், படைபலமும் கொண்ட ஒரு வல்லரசை எதிர்த்து எத்தனைநாள் பழங்குடிகளால் தாக்குப் பிடிக்க முடியும்? பிறகு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அப்துல் காதிர். பின்னர் பிரான்சுக்கும், பிறகு அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியா பிரஞ்சின் காலனி நாடு ஆனது.

             அரேபியக் கைதிகளின் உடல்களைச் சிதைப்பது, பழங்குடிக் குழுக்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவது, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிப்பது என்று பிரான்ஸ் தனது அழிச்சாட்டியத்தை காட்டியது. ஆனால் இஸ்லாமிய போர் நெறிமுறைகளைப் சரிவரப் பின்பற்றிய  அமீர் தனது எதிரிகளைப் போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்ளாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். இவ்வளவு ஏன், ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் வந்தபோது தன்னிடம் கைதிகளாக உள்ள பிரஞ்சுப் படை வீரர்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாமல் போனபோது அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து விட்டார். அதற்கு முன்னரோ பின்போ போரில் நடக்காத இந்த அரிய நிகழ்வை வரலாறு இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளது.

              1841 ஆம் ஆண்டு அப்துல் காதிரிடம் இருந்த பிரஞ்சுக் கைதி ஒருவரை விடுதலை செய்யக் கோரி அல்ஜீரிய பிஷப் எழுதிய கடிதத்தில் ”என்னை உங்களுக்குத் தெரியாது. எனது இறைப் பணி என்பது கடவுளுக்கு பணிவிடை செய்வதும் எல்லா மனிதர்களையும் சகோதர்களாக  நேசிப்பதும் தான். என்னிடம் தருவதற்கு பணமோ தங்கமோ இல்லை “கருணையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற விவிலிய வாக்கியத்துடன் நிறைவடைந்த கடிதத்துக்கு அமீர் இப்படி பதில் எழுதினார்.

                    சிறைபட்டிருக்கும் ஒரு கிருஸ்த்தவரின் விடுதலையை மட்டுமே நீங்கள் கோரி இருக்கக் கூடாது. எல்லா கிருஸ்த்தவர்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கோரி இருக்க வேண்டும். அதே போன்று பிரஞ்சு ராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கூறி இருந்தால், உங்கள் இறைப்பணி இன்னும் இருமடங்கு பலனுள்ளதாய் ஆகி இருக்குமே. விவிலியத்தில் தானே இதுவும் இருக்கிறது ”மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதனை நீ அவர்களுக்குச் செய்” என்று முடித்திருந்தார்.

            இந்த வீரர்களை மீட்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்த வேளையில் பிரஞ்சு தளபதிகள் முதல் முதலாக அப்துல் காதிர் அவர்களை நேரில் கண்டு அவரது எளிமையைக் கண்டு வியந்து போனார்கள். டமாஸ்கசுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னால் அமீரை சந்தித்த நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நன்றிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர்களில் அப்துல் காதிர் அவர்களிடம் கைதியாகப் பிடிபட்டு நல்ல முறையில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் உண்டு.

             நாடுகடத்தப்பட்டு டமாஸ்கஸ் நகரில்  வாழ்ந்து கொண்டிருந்த அப்துல் காதிர் அங்கும் சில சவால்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. 1860 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசின் அப்போதைய கவர்னராக இருந்த உமர் பாஷாவின் ஆளுகையில் இருந்த ஷியாக்களில்  ஒரு பிரிவினரான “துருஸே முஸ்லிம்கள்” கிறித்தவர்களை தாக்கினார்கள். அநியாயமாக எந்தக் கிறித்தவனும் கொலை செய்யப்படுவதை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று அறிவித்த அப்துல் காதிர் ஒரு படையை திரட்டி கிறித்தவர்களை பாதுகாக்கும் பணியில் இறங்கினார்.

                    தனது நாட்டை அடிமைப்படுத்தி, தன்னை போரில் தோற்கடித்து சிறையில் அடைத்து நாடு கடத்தியவர்கள் தானே என்று பார்க்காமல் நியாயத்துக்கு குரல் கொடுத்தார். உதுமானியப் பேரரசின் அரசருக்கு தகவல் அனுப்பினார். படை திரட்டி 12,000 க்கும் மேற்பட்ட கிருஸ்த்தவர்களைக் காப்பாற்றி ”Citadel of Damascus” என்ற கோட்டையில் அவர்களைத் தங்க வைத்து பாதுகாத்தார். உலகம் முழுவதும் பரவிய இந்தத் தகவலில் நெகிழ்ந்துபோனார்கள் கிறித்தவர்கள். கூனிக் குறுகிப் போனது பிரஞ்சு அரசாங்கம். அவரது மனித நேய நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கில் மக்களை பாதுகாப்பாய் இடம் பெயர்த்த ஜிஹாதுக்காக பிரஞ்சு அரசின் மிக உயரிய விருதான  Grand Cross of the Légion d’honneur  அவருக்கு அறிவிக்கப்பட்டது.

             தங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து தங்களால் நாடு கடத்தப்பட்ட ஒருவருக்கே தனது நாட்டின் உயரிய விருதை வழங்கும் நிகழ்வு வரலாற்றில் மிக அரிதே. அது இங்கே நடந்தது. காட்டுத்தீயெனப் பரவிய இந்த சம்பவம் அமெரிக்காவை வந்தடைந்தது. ஒரு முஸ்லிம் கிறித்தவர்களின் உயிருக்காக ஜிஹாத் செய்தாரா? என்று நம்ப முடியாமல் கேட்டார் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன்.

         பாராட்டுக் கடிதமும்  சில துப்பாக்கிகளும் அன்பளிப்பாக லின்கனிடமிருந்து அனுப்பப்பட்டது. இன்றும் அந்தத் துப்பாகிகள் அல்ஜீரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றார்கள். அயோவா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்துக்கு “Elkader” அப்துல் காதிரின் பெயர் சூட்டப்பட்டது.

              அரபுப் பெயர் கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் சந்தேகப் பார்வை பார்க்கப்பட்டு தனிச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில், எங்கோ நீதிக்காய்ப் போராடிய ஒரு விரரின் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தானே !!!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, January 1, 2016

கருப்பு தங்கம் மான்ஸா மூஸா (கி.பி 1280-1337)

        14 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தன் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் பின்பற்றி வாழ்ந்து, மாலி பேரரசின் மாபெரும் அரசராக திகழ்ந்து “கருப்பு தங்கமான” மான்ஸா மூஸா உலகையே தன் வசம் ஈர்த்தார்.

    ஆப்ரிக்க கண்ட வரலாற்றில் மாபெரும் பேரரசு என்றால், அதுவும் அறிவுப் பேரரசு என்றால் அது மான்ஸா மூஸா ஆண்ட அந்த 25 ஆண்டுகால மாலிப் பேரரசுதான். ஆயிரக்கணக்கான தங்க சுரங்கங்களை கொண்ட மாலியின் ஆட்சியாளரான இவர் இஸ்லாமிய மார்க்கத்தில் மிகுந்த பிடிப்பும், பேணுதலும் உடையவராக இருந்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தன் வாழ்நாளில் அல்லாஹ்வுடைய தூது செய்தியான இஸ்லாத்தை இந்த உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும், மாலியை இந்த உலகம் திரும்பி பார்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

     இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும், மாலிப் பேரரசின் மீதும், உலகத்தின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற தீராத தாகத்தோடு காத்திருந்த மான்ஸா மூஸாவுக்கு ஒரு பொன்னான சிந்தனை தோன்றியது. கி.பி 1324 ஆம் ஆண்டிற்கான ஹஜ்ஜை பயன்படுத்தினார், மாலியில் ஹஜ் பயணக் கூட்டம் தயாராகி நின்றது. மான்ஸா மூஸா முதலில் ஒட்டகத்தில் அமர, அவருக்குப் பின்னால் 60,000 மக்கள் உயர்தரமான ஆடைகள் அணிந்து நின்றனர். மேலும் 60 ஒட்டகங்களில் 2000 கிலோ தங்கக் கட்டிகள், 300 பவுண்ட் எடை கொண்ட சுத்திகரிக்கப்படாத தங்கக் துகள்கள், 12 ஆயிரம் பணியாளர்கள் என்று ஒரு பெரும் நகரமே புனித மக்கா நோக்கி நகர்ந்து வரத் துவங்கியது.

            மக்கள் கூட்டம் கூட்டமாக கூடிநின்று மான்ஸா மூஸா அவர்களின் ஹஜ் பயணக் குழுவை வியந்து பார்த்தனர். செல்லுகின்ற வழியெல்லாம் வாழ்ந்த மக்களுக்கு இவர் தங்கக் கட்டிகளையும், தங்கக் துகள்களை இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். வழியில் எந்த எந்த ஊரில் கூடாரம் அமைத்து தங்கினார்களோ அங்கேயெல்லாம் அல்லாஹ்வை வணங்கிட மஸ்ஜிதை கட்டினார். எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இவர் அள்ளிக் கொடுத்த தங்கத்திற்கு அளவே இல்லை. இப்படி இலவசமாக வாரி இறைத்த தங்கத்தினால் அடுத்த 13 ஆண்டுகளுக்கு மேல் எகிப்தில் தங்கத்திற்கு மதிப்பு இல்லாமல் போய் மக்கள் தங்கத்தை வெறுக்கும் அளவிற்கு போனதாம்.

      இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், அவர் வாரி வழங்கிய தங்கம் குறித்தும் தான் உலகம் முழுவதும் பேச்சாக இருந்தது. ஆப்பிரிக்காவே அதிர்ந்தது, ஐரோப்பா ஆச்சரியத்தில் மூழ்கியது. இஸ்லாமிய உலகமே இவருடைய ஹஜ் பயணத்தை பார்ந்து வியந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வணிகர்கள் மாலியில் குவிந்தனர். மாலியில் வியாபாரம் பெரும் அளவில் பெருகத் துவங்கியது. 

      மாலிப் பேரரசை இஸ்லாமியக் கல்வியில் மிக உயர்ந்த பீடமாக உருவாக்க வேண்டும் என்ற வேட்கையில் மக்காவிலிருந்து திருப்பும் போது இஸ்லாமிய உலகின் தலை சிறந்த கல்வியாளர்களையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் மாலிக்கு அழைத்து வந்து, திம்புக்த்து நகரில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கு உத்தரவிட்டார். அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகம் தான் “ஜாமியா திம்புக்த்து” என்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகம்.

      பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றும் மதரஷா பட்டதாரிகள் 5 வேளை தொழுகையை மட்டும் நிறைவேற்றி விட்டு மிகுதியான நேரத்தை வீணாக்குவதை கண்டார், பெரும் எண்ணிக்கையிலான மனித ஆற்றல் மற்றும் அறிவாற்றல் வினாகுவதை உணர்ந்தார். இமாம்கள் எஞ்சிய நேரத்தை பயனுள்ள வகையில் நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் மேன்மைக்கும் பயன்படுத்திட வேண்டும் என்று மூஸா அவர்கள் முடிவு செய்தார்.

     மாலிப் பேரரசு முழுவதும் உள்ள சிறிய அளவிலான குர்ஆன்  பாடசாலைகளை இணைத்து ஒரே பாடத் திட்டமாக, ஒரே பயிற்றுவிப்பு மற்றும் ஒரே கால அளவு முறையாக முதலில் மாற்றி அமைத்து, அதை உயர் கல்வி நிறுவனமான ஜாமியா திம்புக்த்துவில் இணைத்து முஸ்லிம்களின் உயர் கல்வியை வலிமையானதாக, உலகை வெல்லும் கல்வி முறையாக மாற்றினார். இதன் மூலம் மாலிப் பேரரசுலிருந்து  அறிவும் ஆற்றலும் பொருந்திய சமூக, அறிவியல், தொழில்நுட்ப, விஞ்ஞானிகளை உருவாக்கிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி, இதற்காகவே ஜாமியாவின் பாடத் திட்டங்களை உலகத் தரத்திற்கு மாற்றி அமைத்தார்.
    
   இவருடைய திட்டத்தால் உலகம் முழுவதும் ஜாமியா திம்புக்த்துவின் கல்வித்திறன் எதிரொலித்தது. உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் மாலிப் பேரரசின் திம்புக்த்து நகர் நோக்கி கல்வி பயில வந்தனர். அவர் அன்று ஏற்படுத்திய புரச்சி இன்றைக்கும் மாலி என்றாலே “ஆப்பிரிக்காவின் இஸ்லாமிய கல்வியின் தலைமை பீடம்” என்று வரலாறு பதிவாக்கி வைத்துள்ளது.

      கி.பி 1330 இல் ஒரு இலட்சம் மக்கள் தொகை கொண்ட திம்புக்த்து நகரில் அமைத்திருந்த ஜாமியாவில் 25,௦௦௦ மாணவர்கள் கல்வி பயின்றார்கள். இப்பொழுதும் ஜாமியா திம்புக்த்து பெயல்பட்டு வருகிறது. அவர் மரணித்து 7௦௦ ஆண்டுகள் கடந்த போதிலும் மாலி என்றாலே இஸ்லாத்துடன் இணைந்த தொழிற்கல்வியின் தலைமைபீடம் என்று ஆப்ரிக்க மக்கள் தங்களது தங்கத் தலைவனைப் போற்றிக் புகழ்கின்றனர். இவரால் உயிரூட்டப்பட்ட மாலியின் வளர்ச்சி பணிகள் மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணிகள் அடுத்து வந்த 150 ஆண்டுகளுக்கு மாலியை ஆப்பிரிக்காவின் தலைமை பீடமாக மாற்றியது.

     மான்ஸ மூஸா மரணித்து 12 ஆண்டுகள் கழித்து மாலிக்கு சென்ற உலகை சுற்றிய கடல் பயணி “இப்னு பதூதா”  தனது பயணக் குறிப்பில் “வலிமையான ஆட்சியாளராகவும், வளமிக்க நாட்டின் அதிபாராகவும், எதிரிகள் கண்டு நடுங்கிய மாவிரனாகவும், இறை பக்கியும், ஈகை குணமும் உடைய மனித நேயராக வாழ்ந்துள்ளார் மான்ஸ மூஸா. இவர் ஆட்சியில் மாலி முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு, உயந்த நீதி கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் கூட இவ்வுலகில் வாழ்ந்த பெரும் பானக்காரர்களில் இவரே முதலிடம்.


       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Wednesday, December 16, 2015

“தொல்லியல் துறையின் இஸ்லாமிய விரோத போக்கு”

          உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படவேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழும் மனிதர்கள் (அதிகாரிகள்) இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தியாக இருந்தாலும் அவர்கள் எப்படி எந்த வழியில் செயல்படுகிறார்கள் என்பது தான் நமக்கு இன்னமும் புரியாத புதிராக உள்ளது.

       அல்ஹம்துல்லாஹ்.! கடந்த 50 வருடங்கள் இல்லாத அளவிற்கு இப்போது உள்ள சில முஸ்லிம்கள், சில தலைவர்கள் தங்களுடைய கண்ணை திறந்து இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் சில விஷயங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை தெரிந்து கொள்ளத்தான் நாம் தயாராக இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

       “ஒரு நாட்டை ஆழ வேண்டுமானால் உன்னுடைய கலாச்சாரத்தை அவர்களுக்கு மத்தியில் பரப்பு” என்றான் ஒரு ஐரோப்பிய அறிஞன். அந்த விதத்தில் இந்திய தொல்லியல் துறை எந்த அளவுக்கு இஸ்லாமிய விரோத போக்கை கையாள்கிறது என்று சற்று பார்ப்போம். 

       இந்தியாவின் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் அவர்களுடைய பலத்தை காட்டுவதற்கும் தங்களுடைய கலை நயத்தை வெளிப்படுத்துவதற்கும் மாளிகைகள், கோட்டைகள், பள்ளிவாசல்கள் என்று பல கட்டி வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் வாழ்ந்த பிறகு அவருடைய கப்ருகளையும் சிலர் பாதுகாத்து வந்துள்ளனர்.

      முஸ்லிம்களின் கலாச்சாரதை வெளிப்படுத்தும் விஷயங்களை 1861ஆம் ஆண்டு முதல் மோர்டைமல் வீலர் தொடக்கி, B.B லால் போன்றோர் இன்று வரை கொஞ்சம் கொஞ்சமாக அளித்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு கட்டமாக தான் முஸ்லிம் கட்டிய கட்டிடங்கள் மேல் ஒரு போய் வரலாறுகளை சொருவி அதன் உண்மை நிலையை, உண்மை வரலாறை பொய் ஆக்குகிறார்கள். அதில் நான் படித்த இரண்டு மூன்று விஷயங்களை சொல்கிறேன்.

1.       பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை இராம ஜென்ம பூமி என்றனர்.


2.       செர்ஷா ஷுரி கட்டிய கோட்டையை மகாபாரத்தில் வரும் இந்திய பிரசத்தா நகர் என்று கூறிகிறார்கள்.

3.       இஸ்லாத்தை புறக்கணித்து வாழ்ந்த அக்பர் கட்டிய ஃபத்தேபூர் சிக்ரி கோட்டை பள்ளிவாசல் ஒரு சமண மதக் கோயிலை இடித்துத்தான் கட்டினார் என்று 1990இல் தொல்லியல் துறை பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

4.       1977 இல் பீகார் மாநிலத்தில் உள்ள சாசரம் கோட்டையை சேதப்படுத்தும் விதத்தில் 3 புதிய கோயில்களை கட்ட இந்திய தொல்லியல் துறை அனுபதி வழங்கியது.

5.       வேலூர் கோட்டையில் திப்பு சுல்தான் வாரிசுகளால் கட்டப்பட்ட பள்ளிவாசலை 1921 முதல் கையகப்படுத்திய தொல்லியல் துறை அங்கே தொழுகைக்கு அனுமதி மறுக்கிறது, ஆனால் திப்புவின் வாரிசுகளால் பாதுகாக்கப்பட்ட வேலூர் கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஷவரர் ஆலயத்திலும், கிருத்துவ ஆலயத்திலும் வழிபாடுகள் நடக்கின்றன.

6.       ஹைதராபாதில் அமைத்துள்ள சார்மினாரில் ஒரு தூன் ஓரத்தில் ஒரு சின்ன கோயிலை கட்டி வகுப்புவாத விஷத்தை கிளப்புகிறார்கள். 

      RSS, VHP காரர்கள் பல்வேறு பெயர்களில், பல்வேறு முகங்களில் எல்லா அரசியல் கட்சிகளிலும் ஊடுருவியுள்ளவர்களுக்கு முஸ்லிம் அடையாள சின்னங்களை, பாரம்பர்யமான வழிபாட்டுத் தலங்களையும் அழிப்பதற்கு தொல்லியல் துறையில் உள்ள காவிகள் எல்லா வகையிலும் உதவி செய்கிறது.

     பள்ளிவாசல்களில் சிலையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவது, முஸ்லிகளுக்கு சொந்தமான நிலங்களில் காவிக் கொடியை நடுவது, வேல் மற்றும் திரிசுலன்களை இரவோடு இரவாக நடுவது, வக்ஃபு சொத்துகளை அபகரிப்பது போன்ற தேச விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது RSS, VHP யின் தொலைதூர இலக்கு என்றாலும் கூட முஸ்லிங்களின் அலட்சியமும் தான் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

     இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் முஸ்லிம்களின் பாரம்பர்ய சின்னங்களான பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்கள், அடக்கஸ்தலங்கள், வக்ஃபு  சொத்துகள் போன்ற அனைத்தையும்  ஆதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாப்பது முஸ்லிமாக நம் அனைவரின் மீதும் தலையாய கடமை என்றும் அதற்காக அதிகமாக துஆ செய்யுங்கள் என்றும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்

      நமது பிள்ளைகளுக்கு வரலாறுகளின் முக்கியத்துவத்தை சொல்லி இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வளர்ப்பாம்.! இஸ்லாமிய வரலாறுகளையும், முஸ்லிம்களுக்கு செந்தமான பள்ளிவாசல்களின் வஃக்பு செத்துக்களை மீப்போம், பாதுகாப்போம். இன்ஷாஅல்லாஹ்..!

Saturday, December 5, 2015

ஓ, இந்திய முஸ்லிமே! நான் பாபரி மஸ்ஜித்.

 ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.
என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,
நான் களங்கப் படுத்தபட்டேன்
என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!
நான் ஷஹீது ஆக்கபட்டேன்….
அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்
காவிகளின் களியாட்டம் நடக்குதே!

ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்
நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;
நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்…
என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்
இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.
என்னை நீ மறந்து விட்டால் …
நீயும் மறக்கடிக்கப்படுவாய்!
ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்
எதிரிகள் விழித்து கொள்வார்கள்
நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்
நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை
உண்மை ஆக்கிவிடுவார்கள்.
ஓ! இந்திய முஸ்லிமே!
என்னுடைய அழுகை சப்தம்
உன் செவிகளை எட்டவில்லையா?
அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து
என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?


Monday, November 16, 2015

இருண்ட காலம் என்ற பொற்க்காலம் (Golden Age)

        நமது பள்ளி மற்றும் கல்லூரிகளின் புத்தகத்தை புரட்டி பார்த்தல் நாகரிகம் என்றாலே அது கிரேக்க, ரோம் என்று தான் காதில் விழும். இதை தான் நானும் படித்தேன் நீங்களும் படித்து இருப்பீர்கள். நாம் மட்டுமா நம்முடைய பிள்ளைகளும் இதை தான் படிக்கிறார்கள். 

     குரானிலே ஏக இறைவனான அல்லாஹ் கூறுகிறான் “ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். (30:2-3)” என்ற இவ்வசனம் வரலாற்று முக்கியமானது. ஆம்...!

       எப்போது உலகையே ஆண்ட ரோமம்பேரரசு விழ்ந்ததோ அன்றே உலக அழிவு ஆரம்பித்துவிட்டது, உலகில் பயனுள்ள எந்த செயலும் நடைபெறவில்லை, விழ்த்த பிறகு வாழ்ந்த மக்கள் எதற்கும் உதவாதவர்கள் என்றும் மீண்டும் உலகம் பிறந்து மறுமலர்ச்சி அடைய 800 வருடங்கள் ஆனது என்று நம்மையும் நம் பிள்ளைகளையும் படிக்கவைத்து நம்பவைகிறார்கள்.

         நாம் உலக வரலாற்றை சற்று உற்று நோக்கினால் இதன் உண்மை நிலையும் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று நமக்கு விளங்கும். கி.பி. 500 நேரங்களில் ரோம் பேரரசு விழ்ந்தது எண்ணமே உண்மைதான், ஆனால் அதன் பிறகு 800 ஆண்டுகள் உலகின் இருண்டகாலம் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத சொல் (பொய்).

        அவர்கள் கூறும் இந்த 800 ஆண்டுகள் உண்மையிலேயே இவ்வுலகின் பொற்க்காலமாக இருந்தது, அதை ஒப்புக்கொள்ள அவர்களுடைய மனம் மறுக்கிறது. ஏன் தெரியுமா? இந்த 800 ஆண்டுகள் இவ்வுலகம் பொற்க்காலமாக இருக்க முழுக்க முழுக்க முஸ்லிம்கள் மட்டுமே காரணம். அதனால்தான் அவர்கள் இங்கேயும் உண்மையை மறைத்து இஸ்லாமிய விரோதபோக்கை கையாள்கிறார்கள்.

கி.பி 500 முதல் கி.பி 1300 வரை இவ்வுலகில் நடந்த மாற்றங்கள்தான் என்ன..? ஏன் அதை இவர்கள் ஏற்க்க மறுக்கிறார்கள். அவற்றில் சில 

1. முஹம்மது (ஸல்) அவர்கள் பிறப்பு அதை தொடர்ந்து இஸ்லாம் மறு அறிமுகம் பின்பு இஸ்லாமிய ஆட்சி.

2. நான்கு கலிபாக்களில் ஆட்சியிலும் அதை தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சியிலும் இஸ்லாம் பல நாடுகளுக்கு பரவியது.

3. ஆசிய கண்டத்திலுருந்து ஆப்ரிக்கா கண்டத்திற்கும் பிறகு ஐரோப்பிய கண்டத்திற்கும் இஸ்லாம் சென்றடைத்தது (பரவியது).

4. இஸ்லாமிய மார்க்கம் கிழக்கே சீன தேசம் முதல் மேற்கே மொரோர்கோ மற்றும் ஸ்பெயின் வரை பரவி எங்குமே இஸ்லாம் என்ற அமைதி (மதம்) மார்க்கம் வாழ்ந்தது.

5. பாலஸ்தின் இஸ்லாமிய ஆட்சியில் கீழ் இருந்தது.

6. உலகின் பெரும் பெரும் அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக இஸ்லாமியர்களே விளங்கினர்.

7. கணிதம், வானவியல், கடலியல், சமுக அறிவியல் என அணைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் மிகவும் சிறந்து விளங்கினார்கள்.

8. விமானத்தின் ஆரம்ப சிந்தனை, எண்களின் வடிவம், உலக வரைபடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு கண்டுப்பிடிப்புக்கு சொந்தகாரர்கள் இஸ்லாமியர்களே...!

        இப்படி உண்மையை சொன்னால் உலக மக்களுக்கு இஸ்லாமியர்கள் தான் சிறந்தவர்கள் இவர்கள் தான் இந்த உலகத்தை கட்டி எழுப்பியவர்கள் என்றும் நாம் (அமெரிக்க, ஐரோப்பிய) இதற்க்கு சொந்தமில்லை என்ற உண்மை தெரிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையை மறைக்க இந்த மானக்கேட்ட கேடுகெட்ட யூத, நசராணிகள் உலக அளவிலும், RSS, VHP  போன்ற காவி பயங்கரவாதிகள் இந்தியாவிலும் போய் பிரசாரங்களையும், போய் வரலாறுகளையும் எழுதி பரப்பிவருகிறார்கள். 

“வரலாறு தெரியாத சமுகம் வாழ்த்ததாக சரித்திரம் இல்லை”

அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் மார்க்கம் வெற்றிபெறும் என்றென்றும். நமது பிள்ளைகளுக்கு இது போன்ற வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Sunday, November 1, 2015

நபிமொழித் தொகுப்புகள் – ஒரு வரலாற்றுப் பார்வை!

                இஸ்லாத்தில் திருக்குர்ஆனுக்கு அடுத்த மூலாதாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கும் வாழ்வும் அடங்கிய ஹதீஸ் எனப்படும் நபிமொழிகள்தான். அரபி மொழியில் நூற்றுக்கணக்கான நபிமொழித் தொகுப்புகள் இருந்தும், தமிழில் அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீண்ட காலம் கழிந்து விட்டது. அண்மை காலமாகவே இதில் தமிழ் முஸ்லிம்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

            1954ஆம் ஆண்டு உத்தமபாளையம் எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரீ’ என்ற பெயரில் ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பிரதியைத் தமிழில் வெளியிட்டார்கள். இது ஹுசைன் பின் முபாரக் அஸ்ஸுபைதீ (ரஹ்) அவர்கள் அரபி மூலத்தைச் சுருக்கி வெளியிட்ட பிரதியின் தமிழாக்கமாகும்.

         அடுத்து 1989ஆம் ஆண்டு ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பதிப்பான ‘முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம்’ தமிழாக்கத்தை மௌலவி, முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். இதன் அரபி மூலத்தைச் சுருக்கித் தந்தவர் ஹாஃபிள், அப்துல் அழீம் அல் முன்திரீ (ரஹ்) அவர்கள் ஆவார். பின்னர் நாஸிருத்தீன் அல்பானீ அவர்களின் விளக்கக் குறிப்புடன் வெளிவந்தது. இந்தத் தமிழாக்கம் நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டு, இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன.


    அடுத்து 1964ஆம் ஆண்டு பிரபல தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தொண்டி எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள், ‘ஹதீஸ் – பெருமானாரின் பொன்மொழிப் பேழை’ எனும் பெயரில் நபிமொழித் தொகுப்புகளின் திரட்டைத் தமிழில் தந்தார்கள். இது மூன்று பாகங்களில் வெளிவந்துள்ளது. பிரபல நபிமொழித் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ உள்ளிட்ட நூல்களிலிருந்து திரட்டப்பட்ட ஹதீஸ்களின் தமிழாக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

          ஹாஃபிள் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 773 – 852) தொகுத்த ‘புலூஃகுல் மராம்’ எனும் நபிமொழித் தொகுப்பு 1999ஆம் ஆண்டு மௌலவி, அப்துல் காதிர் உமரீ அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்..

         இவையன்றி, உத்தமபாளையம் மௌலானா, முஹம்மது இப்ராஹீம் பாகவி அவர்கள் ‘ஷமாயிலுத் திர்மிதீ’ யைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். அவ்வாறே இமாம் யஹ்யா பின் ஷரஃப் அந்நவவீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 676; கி.பி. 1277) அரபி மொழியில் தொகுத்த ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ எனும் நபிமொழித் தொகுப்பைத் தமிழில் பலர் மொழி பெயர்த்துள்ளனர்.

ஸிஹாஹ் சித்தா
           1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ரஹ்மத் அறக்கட்டளை பிரபல நபிமொழித் தொகுப்புகளான புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ ஆகிய ஆறு ஆதாரபூர்வ ஏடுகளை (ஸிஹாஹ் சித்தா) தமிழில் கொண்டு வரும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரு தொகுப்புகளும் முழுமையாக வெளிவந்துள்ளன.

               ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் 7 பாகங்களிலும், ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 4 பாகங்களிலும் அரபி மூலம், தமிழாக்கம், அடிக் குறிப்பு விளக்கங்களுடன் வெளி வந்துள்ளன. எஞ்சிய நான்கு நபிமொழித் தொகுப்புகளின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக ஏழு ஆலிம்களைக் கொண்ட ஒரு குழு முழுநேரப் பணியைத் தனியான அலுவலகத்தில் மேற்கொண்டுள்ளது.

மார்க்கச் சட்டவியல் (ஃபிக்ஹ்)
           ஃபிக்ஹ் எனப்படும் மார்க்கச் சட்டவியல் நூல்கள் அரபியிலும் பிற மொழிகளிலும் நிறைய உள்ளன. தமிழில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. 1968ஆம்ஆண்டில் உத்தமபாளையம் மௌலானா, S.S. அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘கன்ஸுத் தகாயிக்’ எனும் அரபி நூலை அதே பெயரில் மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டார்கள். தேவதானப்பட்டி மௌலானா அப்துல்கரீம் நூரீ அவர்கள் ‘ஃபிக்ஹின் கலைக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள்.

       மௌலவி, ஆதம் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் ‘ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். `பத்ஹுல் முஈன்’ போன்ற அரபி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இரு பாகங்களில் வெளிவந்துள்ளது.

வரலாறு
         இஸ்லாமிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளி வந்திருந்தாலும், முழுமையான ஒரு வரலாற்றுத் தொகுப்புத் தமிழில் இல்லாதது பெரும் குறையே. அந்தத் தொகுப்பு ஆதாரபூர்வ வரலாற்று நூலாக இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்.

         எகிப்து நாட்டு அறிஞர் முஹம்மத் ரிளா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற பெயரில் அரபியில் எழுதியதை இதே பெயரில் உத்தமபாளையம் மௌலானா, S.S அப்துல்காதிர் பாகவி அவர்கள் 1962ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.

         இந்தியரான மௌலானா ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி அவர்கள் அரபியில் எழுதிய ‘அர்ரஹீகுல் மக்த்தூம்’ எனும் நபி (ஸல்) அவர்களின் முழு வரலாற்று நூல் பிரபலமான ஒன்று. இதை ‘ரஹீக்’ எனும் பெயிரல் ‘தாருல் ஹுதா’ நிறுவனத்தார் 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டனர். இந்நூலை மௌலவி, அ. உமர் ஷரீப் காசிமீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்.

      பேராசிரியர் சையித் இப்ராஹீம், எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், ஜமால் முஹம்மத், இலங்கை அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர், எழுத்தாளர் ஹசன், கவிஞர் மு. மேத்தா, வலம்புரிஜான், கவிஞர் பாப்ரியா உள்ளிட்டோர் இஸ்லாமிய வரலாற்று நூல்களைத் தமிழில் எழுதியுள்ளனர்.

    இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பதும் இஸ்லாமிய நூல்கள் கால்வாசிகூட தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை என்பது வருத்தமான செய்திதான்

Friday, October 16, 2015

யார் இந்த வஹ்ஹாபிகள்? முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) (கி.பி 1702 -1792)

 இஸ்லாமிய உலகில் (அக்கீதா) அடிப்படைக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திய முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே (ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அவர்கள் பிறந்த காலப்பகுதி இருளான காலப்பகுதியாக இருந்தது. மக்கள் பழைய அறியாமைக் கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

கப்றுகளை, குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதேபோன்று சூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில் பிறந்த இமாமவர்கள் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்ததோடு மார்க்க அறிஞரான தனது தந்தையிடம் சிறுவயதிலேயே நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டார்கள்.

தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய சென்ற போது அங்கே ஒரு நிகழ்வை காண்கிறார். நான்கு மத்ஹபுகளுக்கும் தனி தனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு (ஹனபி, ஷாபி, மாலிக்கி, ஹம்பலி)  தடவை நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும், ஹதீஜா (ரலி) அவர்களுக்கும் கப்ர் கட்டி வைத்திருந்தனர். இது போன்று மக்காவை சுற்றி ஏகப்பட்ட தர்ஹாக்கள் இருந்தன.

கல்வி கற்பதற்காக மதீனாவுக்கு சென்று சில வருடங்கள் கல்வி கற்றார்கள். பிறகு (பஷார) ஈராக் நாட்டிற்கும், ஈராக்கிற்க்கும், லக்‌ஷா (இன்றைய பாலஸ்தீனின் உள்ள காஸா) சென்று அங்குள்ள மார்க்க அறிஞர்களிடமும் கல்வி கற்றார்கள். இவ்வாறு பல நாடுகளில் சுற்றுப் பயணங்களில் வாயிலாக இமாமவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார்கள்.
  
தனது 25ஆவது வயதில் கல்வி சுற்றுலா முடித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடத்தில் வந்தார்கள். ஆனால் அவருடைய தந்தை உயைனா என்ற இடத்திலிருந்து ஹிஜ்ரத் (நாடு துறந்து) செய்து ஹுரைனிலா என்கிற ஊரில் இருந்தார்கள். ஹுரைனிலா என்ற பகுதியில் இருந்து கொண்டு தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது முதல் அழைப்புப் பணியை தொடங்கினார்கள்.

சரியான இஸ்லாத்தை சொன்னவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்ப்படுகிறது மறுபடியும் ஹுரைனிலா என்ற ஊரிலிருந்து தனது சொந்த ஊரான உயைனாவிற்கு வந்தார்கள். உயைனாவிலுள்ள அமீர் (ஆட்சியாளர்) அவர்களோடு இமாமவர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. அமீரின் உதவியோடு தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். அந்த பகுதியில் (ரியாத்தில்) ஒரு மரம் இருந்தது அது பிள்ளை தரும் மரம், என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த மரத்திடம் வந்து பிரார்திப்பார்கள்.

அதேபோன்று இறைவழியில் வீரமரணம் அடைந்த ஸாயித் இப்னு கத்தாப், மிரர் இப்னு அஸ்வர் அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் தர்ஹா கட்டி வணங்கிக் கொண்டிருந்தனர். இமாமவர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலமாக மனமாற்றத்தை ஏற்ப்படுத்தி அமீருடைய 600 படைவீரர்களோடு இமாமவர்கள் அந்த தர்ஹாகளை உடைத்தார்கள். இமாமவர்கள் இதோடு முடங்கி விடாமல் அந்த மரத்தையும் வெட்டிச் சாய்த்தார்கள்.

இவர்கள் செய்த சீர்திருத்த பணி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சில காரணங்களால் இமாமவர்களால் உயைனாவிலும் இருக்க முடியவில்லை. தனது சொந்த ஊரைவிட்டே இமாமவர்கள் ஹிஜ்ரத் போக வேண்டிய சூழல். அந்த ஆட்சியாளர், இமாமை பாதுகாப்புடன் அனுப்பிவைப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பக்கத்து ஊரான அஃத்திரையா என்கிற பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்.

அஃத்திரையா பகுதியை முஹம்மத் இப்னு சவூத் என்பவர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். அப்துல் வஹ்ஹாப்பை பற்றி கேள்விப்பட்ட இவர் அவரை நேரடியாக அழைத்துப் பேசி இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
  
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மன்னரிடம், நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கையை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள் என்றதும் மன்னரும் அதற்கு சரி நான் உங்களுக்கு முழு உதவியும் செய்கிறேன். ஆனால் அல்லாஹ் ஏகத்துவ மாற்றத்தை இந்த பகுதியில் உருவாக்கி நீங்கள் பெரிய அந்தஸ்த்தை அடைந்தால் இந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்று நிபந்தனையிட்டார். இமாமவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

      இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மன்னர் இமாமவர்களை அரசாங்க பிரதிநிதியாக்கி இஸ்லாமிய பிராச்சரத்தை முழுவீச்சில் செய்ய அனுமதி கொடுத்தார். ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்ததால் இமாமவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து முழு வீச்சில் நடந்தது.

முஹம்மது இப்னு சவூத் அவர்களின் ஆட்சியும் விரிவடைந்து கொண்டே சென்றது. மன்னர் சவூத் மக்கா, மதீனா மற்றும் சிதறிக்கிடந்த மற்ற சிற்றரசுகளையும் கைப்பற்றி இன்றைய சவூதி நிலப்பரப்பைக் கடந்து ஈராக் வரை வெற்றி பெற்றுக்கொண்டே சென்றார். இமாமவர்களும் மன்னருக்கு ஈடு கொடுத்து, மக்களை எகத்துவ கொள்கையின் மூலம் ஒரே குடையின் கீழ் ஒன்று படுத்துவது, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை பலப்படுத்தி முழு அரேபியாவிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

அவர்கள் காலத்து இஸ்லாமிய சமூகம் ஷிர்க்கிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி போய் இருந்தது. சவூதியில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகமும் இதே நிலையில்தான் இருந்தது. சஹாபாக்கள் காலத்தில் எவ்வாறு இஸ்லாம் வேகமாக வளர்ச்சி பெற்றதோ அதுபோல் இமாமவர்களின் காலக்கட்டத்திலும் தூய இஸ்லாம் எழுச்சி பெற்றது. இறுதியாக, ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்திய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள்.

வஹ்ஹாபிய வளர்ச்சியை கண்ட அன்றைய வல்லரசுகளான இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள், உஸ்மானிய சம்ராஜ்ஜியத்தின் 2 வது சுல்தானிடம், துருக்கியை வஹ்ஹாபிகள் கைப்பற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் முந்திக் கொண்டு சவூதியை கைப்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.

 துருக்கிய ஆட்சியாளரும் அதனை ஏற்றுக்கொண்டு சவூதியின் மீது படையெடுத்தார். சவூதியில் நடந்த பல போர்களுக்கு பிறகு ஹிஜ்ரி 1240ல் இமாமவர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய அரசமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது.

ஆனால் இமாமவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏகத்துவ புரட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னாட்களில் வாளால் சாதிக்கமுடியாததை இந்த கொள்கை சாதித்தது. ஆம், சூஃபிஸ கொள்கை கொண்ட துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்..

சமகாலத்தில் வாழ்ந்த மாற்று மத அறிஞர் ஒருவர் – ‘சூஃபிசத்தை பின்பற்றிய உஸ்மானிய சாம்ராஜ்யம் மட்டும் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இமாமவர்கள் விட்டுச்சென்ற புரட்சிகர சமூகப் பணி தொடர்ந்து சீராக நடந்து இன்று அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இஸ்லாமிய சமூகத்தின் கட்டமைப்பு இருந்திருக்கும்என்று எழுதுகிறார்.


இவரைபற்றி நாம் இன்னும் அதிகமாக படிக்கவேண்டும், நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், அவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, October 2, 2015

அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா. (கி.பி 1263- கி.பி 1328)

  மாபெரும் மார்க்க மேதையும், சீர்திருத்தவாதியுமான இவர் ஹிஜ்ரி 661ல் சிரியாவில் பிறந்தார். இவருடைய தந்தை இமாமாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டுவிட்டார். இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறு வயதிலேயே அபார நினைவாற்றலைப் பெற்றிருப்பதை அறிந்த ஓர் அறிஞர் இச்சிறுவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பின் இவர் உலகில் சிறந்த அறிஞராக விளங்குவார் என்று முன்னறிவுப்புச் செய்தார்.

இவர் அறிந்த ஒன்றை ஒருபோதும் மறந்ததில்லை. இவர் 200க்கு மேற்பட்ட ஹதீஸ் கலை இமாம்களிடம் பாடம் பயின்றிருக்கிறார். இவருக்கு ஹதீதுக்கலையில் இருந்த அறிவாற்றலைக் கண்டு அறிஞர் இப்னுல் வர்தீ இப்னு தைமிய்யா அறியாத ஹதீஸ் ஹதீஸே அல்லஎன்று போற்றுகின்றார்.

கி.பி.1282ல் தமது 22-வது வயதில் இவரின் தந்தையார் இறந்ததும் அவர் வகித்த பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றதும் இவர் ஆற்றிய முதற் சொற்பொழிவே மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அவ்வாண்டில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சிஎன்று அதனை வரலாற்றாசிரியர் இப்னு கதீர் வர்ணிக்கிறார்.

அப்பதவியில் பதினேழு ஆண்டுகள் இருந்து பணி புரிந்தார். தமது வகுப்புகளிலும் மக்கள் மன்றங்களிலும் இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் துணிவுடன் எடுத்துரைத்தார். பித்அத்என்னும் அனாச்சாரங்களையும் இஸ்லாத்திற்கெதிரான பொய்பிரச்சாரங்களையும் முறியடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டார்.

ஹி 699-ல் தார்த்தாரியர்கள் (சிரியா) திமிஷ்கின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது இவர் அவர்களை வாக்காலும் வாளாலும் எதிர்த்து நின்றார். மக்களை புறமுதுகிட்டு ஓடாது வீராவேசத்துடன் போர் புரியுமாறு தூண்டினார். உலமாக்கள் தலைமையில் மக்களை ஒன்று திரட்டி போர் பயிற்சி, அம்பெய்தும் பயிற்சி அளித்து போரிலே ஈடுபடுமாறு செய்து தாமும் கலந்து கொண்டார். இவரின் தீரச்செயல்களை வரவேற்று மக்கள் ஒத்துழைப்பு நல்கி பெரிதும் கௌரவித்தனர்.

எகிப்து மன்னர் முஹம்மது காலாவூன் தார்த்தாரியர்களை எதிர்த்து நின்ற போதிலும் போரில் தோற்று வெருண்டோடினார். புதிதாக இஸ்லாத்தை ஏற்று மஹ்மூது என்னும் பெயர் சூடிய செங்கிஸ்கானின் பேரன் காஸானை சந்தித்து குர்ஆன் ஹதீஸ் போதனைகளை எடுத்தோதி முஸ்லிம்களின் உயிரை வீணேகொல்ல வேண்டாமென்று ஆணித்தரமாக வாதிட்டார். அப்போது இத்துணை பெரிய தைரியசாலியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று வியந்தார் காஸான்.

யூத கிறித்தவ சகவாசத்தால் முஸ்லிம்களிடையே ஊடுருவியிருந்த பழக்கவழக்கங்கள், அனாச்சாரங்கள், பித்அத்துகளை களைவதில் முழு மூச்சாக ஈடுபட்டார். கற்பாறைக்கு மக்கள் தெய்வீகத் தன்மை கற்பித்து அங்கு இறையருள் வேண்டி சென்று வருவதைக்கண்ட இவர் கல்வெட்டும் தொழிலாளர் அழைத்துச் சென்று அதனை வெட்டி துவம்சமாக்கி அப்பழக்கத்திற்கு சாவுமணி கட்டினார். மார்க்கத்திற்கு எதிரான பாத்தினீ, நுளைரீ, இஸ்மாயிலீ முதலான சில வகுப்பார் குன்றுகளிலும் காடுகளிலும் வாழ்ந்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு உதவிவருவதைக் கண்டு மனம் கொதித்து சுல்தானின் படையுடன் அவர்கள் மீது போர் மேற்கொண்டார்.

இவ்வாறு எங்கெல்லாம் ஆகாப் பழக்கங்களைக் கண்டாரோ அங்கெல்லாம் துணிச்சலோடு சென்று அவற்றை அகற்றினார் இவர். இதனால் இவருக்குப் பல எதிரிகள் ஏற்படலாயினர். குர்ஆன் ஹதீஸின் படி முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டுமென்று இவர் முழங்கி வந்தது இவருக்குப் பல ஆதரவாளர்களைத் தேடித்தந்த போதினும் அதைவிட அதிகமாக எதிரிகளையும் உண்டு பண்ணியது. எனினும் தமது சத்தியப்போதனைகளிலிருந்து ஒருபோதும் இவர் பின்வாங்கவே இல்லை. இருப்பினும் எதிரிகளின் சூழ்சியால் இவரையும் இவரது சகோதரர்களையும் சிறையில் தள்ளப்பட்டனர்.

சிறையிலும் இவர் தம் கொள்கைப் பிரச்சாரத்தை விடவில்லை. இவர் சென்ற சில நாட்களில் சிறைக் கூடம் முழுவதும் பிரச்சார மடமாக காட்சிவழங்கியது. இவரின் மாணவர்களாக மாறிய கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுது கூட விடுதலை வேண்டாமென்று கூறிச்சிறையிலேயே இவருடன் இருந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரி 707 ரபீவுல் அவ்வல் 23ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட இவர் கெய்ரோவிலுள்ள மத்ரஸா ஸாலிஹிய்யாவிலும் ஏனைய கல்விக்கூடங்களிலும் சொற்பொழிவாற்றினார். பிற்காலத்தில் தோன்றிய சூபித்தத்துவம் இந்தோ-கிரேக்க தத்துவமேயாகும் என்றும் அது ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் கூறினார். சூபிகளெல்லாம் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்க மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். இதன் பின் விடுதலை செய்யப்பட்ட இவர், அங்கு நிலவி வந்த ஸப்யீனிய்யா தரீக்காவை உடைத்தெறிந்து அதில் சேர்ந்திருந்த பலரைத் தம் கொள்கையை ஏற்குமாறு செய்தார்.

ஹிஜ்ரி 709ல் நாஸிர் இப்னு கலாவூன் அரியணை ஏறியதும் இவரை கெய்ரோ வரவழைத்து இவரது எதிரிகளுக்கெல்லாம் தலைவெட்டும் தண்டனை விதிப்பதாக கூறிய போது அவர்களையெல்லாம் எப்போதே மன்னித்துவிட்டேன் என்று கூறினார். இதன் பிறகு இவருடைய விரோதிகள் இவரது பிச்சார வேகத்தைத் தடைசெய்ய முடியாது போகவே இவரை அடித்து உதைத்து உடலில் பலத்த காயத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது பழிவாங்க எண்ணிய தமது ஆதரவாளர்களிடம் அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம் எனத் தடுத்துவிட்டார். இவ்விதம் தனக்குத் துன்பங்கள் விளைவித்த எதிரிகள் அத்தனைபேரையும் மன்னித்த நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

ஹிஜ்ரி 726 வரை மத்ரஸா ஹன்பலிய்யாவிலும், கஸ்ஸாஸீனிலிருந்த தமது சொந்த பாடசாலையிலும் குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள் நடத்தி வந்தார்கள். இந்தவேளையில் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பெரியார்களின் கப்ருகளுக்கும், நபி (ஸல்) அவர்களுடைய கப்றுக்கும் தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு செல்லக்கூடாது என இவர்கள் வழங்கிய ஒரு ஃபத்வாவை வைத்து எதிர்பாளர்கள் பெரும் கிளர்ச்சி செய்யவே மீண்டும் இவர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

   திமிஷ்கில் இவர் சிறையில் தள்ளப்பட்டபோது இவரது சகோதரர் அப்துர்ரஹமான், இவரது மாணவர் ஹாபிள் இப்னு கைய்யூமும் உடனிருந்தனர். சிறையில் வைத்து இவர் எழுதியவை யாவும் பிரதி செய்யப்பட்டு நாடு முழுவதும் பரத்தப்பட்டன. இதையறிந்த அரசாங்கம் அவையாவையும் பறிமுதல் செய்தது. ஆனால் இவரோ அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாது தமக்குக் கிடைத்த காகிதங்களில் தமது கருத்துகளை கரிதுண்டால் எழுதி வந்தார். இப்போராட்டத்தை இவர் ஒரு ஜிஹாத் என்றே கருதினார்.

சிறையிலிருக்கும் போது திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியதோடு எண்பது தடவை ஓதி முடித்தார். எண்பத்தொன்றாவது தடவை ஸூரத்துல் கமர் ஓதிவரும்பொழுது இவருடைய ஆவி உடலைவிட்டும் பிரிந்தது. அப்போது இவருக்கு வயது 67. இவருடைய ஜனாஸா தொழுகையில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவருடைய ஜனாஸா தொழுகை பல்வேறு நாடுகளிலும், நெடுந்தொலைவிலுள்ள எமனிலும், சீனாவிலும்கூட நிகழ்த்தப்பட்டது.

இவர்கள் 500 நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். அவற்றுள் மஜ்மூஉல் பதாவா, (மஜ்மூஅத்துல் ஃபதாவா இப்னு தைமிய்யா 20 பாகங்களில் இன்றும் கிடைக்கின்றன) அல் வாஸிதிய்யா, தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி, நக்ளுல் மந்திக், மின்ஹாஜுஸ் சுன்னத்திந் நபவிய்யா. தப்ஸீர் இப்னு தைமிய்யா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


இவரைபற்றி நாம் இன்னும் அதிகமாக படிக்கவேண்டும், நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், அவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!